சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல்... பாஜக வெற்றி..  "இது கள்ளாட்டம்".. ஆம் ஆத்மி புகார்!

Jan 30, 2024,04:12 PM IST
சண்டிகர்:  சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கும், பாஜகவுக்கும் இடையே நடந்த மோதலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு விழுந்த வாக்குகளில் 8 ஓட்டுக்கள், செல்லாதது என்று தேர்தல் நடத்திய அதிகாரி அறிவித்தது, பாஜகவுக்கு சாதகமாகப் போய் அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார்.



சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோங்கரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கை கோர்த்துப் போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

சண்டிகர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 இடங்களிலும், பாஜகவுக்கு 14 இடங்களிலும், காங்கிரஸுக்கு 7 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கை கோர்த்ததால் ஆம் ஆத்மி வேட்பாளரே வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். 

அரவிந்த் கெஜ்ரிவால் அதிருப்தி

ஆனால், இன்று நடந்த தேர்தலில் சோங்கருக்கு 16 வாக்குகள் விழுந்தன. அதாவது எதிர்த் தரப்பிலிருந்து 2 வாக்குகள் அவருக்கு வந்துள்ளன. அதேசமயம், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 12வாக்குகள் கிடைத்தன. 8 வாக்குகள் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. அந்த எட்டு வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்குகள்தான்.  இந்த அறிவிப்பால் ஆம் ஆத்மி கட்சியினர் கொதிப்படைந்தனர். 

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இது மோசடியான தேர்தல். பாஜக மோசடி செய்து வென்றுள்ளது. தேர்தல் நடைமுறை எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மேயர் தேர்தலுக்கே இவ்வளவு கீழே இறங்கிப் போகிறவர்கள், தேசிய அளவில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இது மிகவும் கவலை தருகிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்