சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் கட்டப் பட்டியலில் சில மாவட்டத் தலைவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் நிர்வாக ரீதியாக 67 மாவட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியும், உறுப்பினர் சேர்க்கையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த தேர்தல் தற்போது இறுதிக் கட்டமாக மாவட்டத் தலைவர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது.
அதில் முதல் கட்டமாக சில மாவட்டங்களுக்குத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியல் வருமாறு:
திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்
காஞ்சிபுரம் – ஜெகதீசன்
செங்கல்பட்டு தெற்கு – மருத்துவர் பிரவீன் குமார்
திருப்பத்தூர் – எம் தண்டாயுதபாணி
கடலூர் மேற்கு – க.தமிழழகன்
கடலூர் கிழக்கு – கிருஷ்ணமூர்த்தி
அரியலூர்- டாக்டர்.பரமேஸ்வரி
சேலம் – சசிகுமார்
நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்
நாமக்கல் கிழக்கு – சரவணன்
நீலகிரி – தர்மன்
திருச்சி – ஒண்டிமுத்து
மயிலாடுதுறை – நாஞ்சில் கே.பாலு
தேனி -ராஜபாண்டியன்
சிவகங்கை – பாண்டித்துரை
திண்டுக்கல் கிழக்கு – முத்துராமலிங்கம்
திருநெல்வேலி – முத்து பலவேசம்
தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி
விருதுநகர் கிழக்கு – பென்டகன் ஜி பாண்டுரங்கன்
கன்னியாகுமரி மேற்கு – ஆர் டி சுரேஷ்
கன்னியாகுமரி கிழக்கு – கோப்பு குமார்
அண்ணாமலை வாழ்த்து
புதிய மாவட்டத் தலைவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜக புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
{{comments.comment}}