சென்னை: டெல்லியில் நாளை பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவசர அவசரமாக நாளை டெல்லி செல்கின்றனர்.
டெல்லியில் நாளைய தினம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால், தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாளை டெல்லி செல்கின்றனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும், அதிமுக-பாஜக கூட்டணியில் இன்னும் உட்கட்சி பூசல் இருந்து வருவதாகவும், அதிமுக-பாஜக இடையே இருவேறுபட்ட கருத்து நிலவி வருவதாக பாஜக தலைமைக்கு தகவல்கள் சென்றுள்ளது.
இது குறித்து விசாரிக்கவும், வரும் காலங்களில் உட்கட்சி பூசல் ஏதும் ஏற்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தவும் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாஜக தமிழக முக்கிய தலைவர் நாளை டெல்லி செல்ல உள்ளனர்.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}