சென்னை: டெல்லியில் நாளை பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவசர அவசரமாக நாளை டெல்லி செல்கின்றனர்.
டெல்லியில் நாளைய தினம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால், தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாளை டெல்லி செல்கின்றனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும், அதிமுக-பாஜக கூட்டணியில் இன்னும் உட்கட்சி பூசல் இருந்து வருவதாகவும், அதிமுக-பாஜக இடையே இருவேறுபட்ட கருத்து நிலவி வருவதாக பாஜக தலைமைக்கு தகவல்கள் சென்றுள்ளது.
இது குறித்து விசாரிக்கவும், வரும் காலங்களில் உட்கட்சி பூசல் ஏதும் ஏற்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தவும் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாஜக தமிழக முக்கிய தலைவர் நாளை டெல்லி செல்ல உள்ளனர்.
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்
டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!
தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!
அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?
சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!
மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)
{{comments.comment}}