எதுக்கு டிகிரியெல்லாம் படிச்சுட்டு.. வேஸ்ட்.. பஞ்சர் கடை வைங்க... பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை!

Jul 16, 2024,05:16 PM IST

போபால்:  கல்லூரியில் படித்து வாங்கும் பட்டங்களால் எந்த பயனும் இல்லை என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு பைக் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வாழ்க்கையில் பிழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ., பன்னாலால் ஷக்யா என்பவர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் உள்ள 55 மாவட்டங்களில் பிஎம் காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் கல்லூரிகளை இந்தூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அந்த விழாவில், குணா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சிலிருந்து:


நான் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். டிகிரியால் எந்த பயனும் இல்லை. அதற்கு பதிலாக, வாழ்வாதாரத்தை ஓட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பஞ்சர் பழுது பார்க்கும் கடையை திறந்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்று பிஎம் எக்ஸலன்ஸ் கல்லூரியை திறக்கிறோம். இந்த கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.




மாசு மற்றும் சுற்றுச்சூழல் குறித்துக் கவலை உள்ளது. ஆனால் யாரும் பஞ்ச பூதங்களை பாதுகாக்கும் திசையில் செயல்படுவதில்லை. முதன் முதலில் மனித உடலில் ஆதாரமான பஞ்சபூதங்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். இன்று நாம் நட்ட மரங்களை எவ்வளவு காலம் பாதுகாப்போம். ஆறுகள் மற்றும் வடிகால்களில் உள்ள அரசு நிலங்களில் பரவலாக ஆக்கிரமிப்பு நடக்கிறது. பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் எதையும் சாப்பிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.


உள்துறை அமைச்சர் விழாவிலேயே அதுவும் கல்லூரித் திறப்பு விழாவிலேயே இதெல்லாம் வேஸ்ட் என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச எதிர்க்கட்சிகள் பன்னாலாலின் பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்:


பன்னாலால் இதுபோல பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்தான் பன்னாலால். முன்பொருமுறை அவர் பேசுகையில், பெண்கள் பாய் பிரண்டு வைத்துக் கொள்ளக் கூடாது. சமூகத்திற்கு பயன் உள்ள பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது முடியாவிட்டால் பிள்ளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.


அதேபோல விராட் கோலியின் தேசபக்தி குறித்தும் கேள்வி கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்தான் நம்முடைய பன்னாலால் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்