எதுக்கு டிகிரியெல்லாம் படிச்சுட்டு.. வேஸ்ட்.. பஞ்சர் கடை வைங்க... பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை!

Jul 16, 2024,05:16 PM IST

போபால்:  கல்லூரியில் படித்து வாங்கும் பட்டங்களால் எந்த பயனும் இல்லை என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு பைக் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வாழ்க்கையில் பிழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ., பன்னாலால் ஷக்யா என்பவர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் உள்ள 55 மாவட்டங்களில் பிஎம் காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் கல்லூரிகளை இந்தூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அந்த விழாவில், குணா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சிலிருந்து:


நான் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். டிகிரியால் எந்த பயனும் இல்லை. அதற்கு பதிலாக, வாழ்வாதாரத்தை ஓட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பஞ்சர் பழுது பார்க்கும் கடையை திறந்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்று பிஎம் எக்ஸலன்ஸ் கல்லூரியை திறக்கிறோம். இந்த கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.




மாசு மற்றும் சுற்றுச்சூழல் குறித்துக் கவலை உள்ளது. ஆனால் யாரும் பஞ்ச பூதங்களை பாதுகாக்கும் திசையில் செயல்படுவதில்லை. முதன் முதலில் மனித உடலில் ஆதாரமான பஞ்சபூதங்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். இன்று நாம் நட்ட மரங்களை எவ்வளவு காலம் பாதுகாப்போம். ஆறுகள் மற்றும் வடிகால்களில் உள்ள அரசு நிலங்களில் பரவலாக ஆக்கிரமிப்பு நடக்கிறது. பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் எதையும் சாப்பிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.


உள்துறை அமைச்சர் விழாவிலேயே அதுவும் கல்லூரித் திறப்பு விழாவிலேயே இதெல்லாம் வேஸ்ட் என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச எதிர்க்கட்சிகள் பன்னாலாலின் பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்:


பன்னாலால் இதுபோல பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்தான் பன்னாலால். முன்பொருமுறை அவர் பேசுகையில், பெண்கள் பாய் பிரண்டு வைத்துக் கொள்ளக் கூடாது. சமூகத்திற்கு பயன் உள்ள பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது முடியாவிட்டால் பிள்ளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.


அதேபோல விராட் கோலியின் தேசபக்தி குறித்தும் கேள்வி கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்தான் நம்முடைய பன்னாலால் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்