டெல்லி :குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் பாஜகவைச் சேர்ந்தவரையே தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர், மருத்துவ காரணங்களுக்கு தனது பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியதுடன், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த துணை ஜனாதிபதி பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்நாத் தாகூர் உள்ளிட்ட பல பெயர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிப்பட்டது. இவர்களில் ராம்நாத் தாகூரின் பெயர் தான் அதிகமாக சொல்லப்படுகிறது. இவர் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அடிக்கடி நடக்கும் இவர்களின் சந்திப்புகளும், இந்த சந்திப்பிற்கு பிறகு நட்டா மற்ற எம்பி,,க்களுடன் ஆலோசனை நடத்தியதையும் வைத்து பார்க்கையில் இவரே அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில்,அடுத்த துணை ஜனாதிபதி பாஜக கட்சியை சேர்ந்தவராக தான் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் ச்ட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநில மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பீகாரை சேர்ந்த தாகூரை அடுத்த துணை ஜனாதிபதியாக பாஜக தலைமை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை துவக்கி விட்டதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}