டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் மனைவி பயன்படுத்தி வந்த டொயோட்டோ பார்ச்சூனர் கார் திருட்டு போயுள்ளது.
ஜே.பி. நட்டாவின் மனைவி டாக்டர் மல்லிகா நட்டா ஒரு பார்ச்சூனர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்தக் காரின் டிரைவராக இருப்பவர் ஜோகிந்தர். மார்ச் 19ம் தேதி காரை சர்வீஸ் விடுவதற்காக தென் கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்தபுரி பகுதியில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு காரை எடுத்து வந்துள்ளார் ஜோகிந்தர்.
சர்வீஸ் சென்டருக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது காரைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது கார் திருட்டுப் போனது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் உடனடியாக சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரித்துப் பார்த்தபோது அந்தக் கார் குருகிராம் நோக்கிப் போனது தெரிய வந்தது. இருப்பினும் ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்தக் கார் எந்தப் பக்கமாக போனது என்று கண்டுபிடிக்க முடியில்லை. தொடர்ந்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் கார் இமாச்சல் பிரதேச மாநில பதிவெண் கொண்டதாகும்.
டெல்லியில் பட்டப் பகலில், பாஜக தேசியத் தலைவர் மனைவியின் காரே திருட்டு போனதால் டெல்லி காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. காணாமல் போன காரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}