டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் மனைவி பயன்படுத்தி வந்த டொயோட்டோ பார்ச்சூனர் கார் திருட்டு போயுள்ளது.
ஜே.பி. நட்டாவின் மனைவி டாக்டர் மல்லிகா நட்டா ஒரு பார்ச்சூனர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்தக் காரின் டிரைவராக இருப்பவர் ஜோகிந்தர். மார்ச் 19ம் தேதி காரை சர்வீஸ் விடுவதற்காக தென் கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்தபுரி பகுதியில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு காரை எடுத்து வந்துள்ளார் ஜோகிந்தர்.
சர்வீஸ் சென்டருக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது காரைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது கார் திருட்டுப் போனது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் உடனடியாக சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரித்துப் பார்த்தபோது அந்தக் கார் குருகிராம் நோக்கிப் போனது தெரிய வந்தது. இருப்பினும் ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்தக் கார் எந்தப் பக்கமாக போனது என்று கண்டுபிடிக்க முடியில்லை. தொடர்ந்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் கார் இமாச்சல் பிரதேச மாநில பதிவெண் கொண்டதாகும்.
டெல்லியில் பட்டப் பகலில், பாஜக தேசியத் தலைவர் மனைவியின் காரே திருட்டு போனதால் டெல்லி காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. காணாமல் போன காரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}