"இது நடை கூட்டல் பயணம்".. அண்ணாமலை பாதயாத்திரை குறித்து நூதன விளக்கம்!

Aug 04, 2023,01:17 PM IST
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் "பாதயாத்திரை" எதிர்க்கட்சிகள் மத்தியில் கேலி கிண்டல்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி அது ராமேஸ்வரத்தில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதைத் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த பாத யாத்திரை வித்தியாசமாக இருக்கிறது.



அதாவது கூடவே ஒரு அதி நவீன கேரவன் வாகனமும் செல்கிறது. அதிலும் அண்ணாமலை இடை இடையே பயணிக்கிறார். அவ்வப்போது நடக்கிறார். முழுக்க முழுக்க அவர் நடந்து செல்லவில்லை. இது பலரிடையே விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கேரவன் வாகனத்தை வைத்தும் ஏகப்பட்ட டிரோல்கள் வந்து விட்டன.

இந்த நிலையில் இதுகுறித்து ஒரு யூடியூப் சானலுக்கு கட்சியின்  மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் அளித்த பேட்டியில் வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் விஷயம் இத பாதயாத்திரை இல்லை. தமிழ்நாட்டில் எல்லா இடத்துக்கும் நடந்து போனால் 234 தொகுதிகளை முடிக்க 3 வருடம் ஆகும். 

விவசாயிகள், இளைஞர்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், தொழில் முக்கியத்துவம் உடைய நெசவாளர்கள் உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார். சும்மா டாடா காட்டி விட்டு பப்ளிக் மீட்டிங் பேசிச் செல்லவில்லை. எனவே முழுசாக முடிக்க 3 வருடம் ஆகும்.  எங்களது நோக்கம் மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளையும் கவர் செய்ய வேண்டும்.. எனவே இது நடை பயணம். அதாவது நடை கூட்டல் பயணம்.  இதை அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். 

அதை விட்டு விட்டு, அண்ணாமலை பாதயாத்திரைன்னு சொன்னாரே நடக்கலையே பஸ்ஸில் பேறாரோனா்னு சொல்லக் கூடாது என்றார் அவர்.

வித்தியாசமா இருக்கேண்ணே விளக்கம்!

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்