டெல்லி: 2 கட்டமாக இதுவரை 267 வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக மேலிடம் இதுவரை 21 சதவீத சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுத்துள்ளது. மக்கள் மத்தியில் கெட்ட பெயர், கட்சிக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்தவர்களை இந்த முறை நீக்கியுள்ளது பாஜக.
குறிப்பாக டெல்லியில் மொத்தம் உள்ள 7 சிட்டிங் எம்.பிக்களில் ஒருவருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற 6 பேரையும் தூக்கி விட்டது பாஜக. இதில் மூத்த தலைவர் ஹர்ஷவர்த்தனும் அடக்கம். அதேபோல டிக்கெட் கிடைக்காது என்று தெரிந்துதான் அரசியலை விட்டே போவதாக முன்பே கூறி விட்டார் கெளதம் கம்பீர். இவர்கள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளதால் மீண்டும் சீட் தரவில்லையாம் பாஜக தலைமை.

மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்து, ஆப்பை எடுத்து தானே வைத்துக் கொள்ள விரும்பாததால்தான், அவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் சீட் கொடுக்காமல் நிராகரித்துள்ளதாம் பாஜக. அடிமட்ட அளவில் கிடைத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில்தான் இவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாம். நிறுத்தினால் நிச்சயம் இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதும் இன்னொரு காரணம்.
வேட்பாளர்கள் விஷயத்தில் கவனமாக இருந்தால்தான் 370 தொகுதிகளை பாஜகவால் தனித்து வெல்ல முடியும் என்றும் மேலிடம் கருதுகிறதாம். முதல் வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. அதில் 33 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் தரப்படவில்லை. அதில் முக்கியமானவர்கள் பிரக்யா தாக்கூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வெர்மா. இவர்கள் வெறுப்புப் பேச்சுகளுக்குப் பெயர் போனவர்கள் ஆவர். 2வது பட்டியலில் 30 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}