டெல்லி: 2 கட்டமாக இதுவரை 267 வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக மேலிடம் இதுவரை 21 சதவீத சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுத்துள்ளது. மக்கள் மத்தியில் கெட்ட பெயர், கட்சிக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்தவர்களை இந்த முறை நீக்கியுள்ளது பாஜக.
குறிப்பாக டெல்லியில் மொத்தம் உள்ள 7 சிட்டிங் எம்.பிக்களில் ஒருவருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற 6 பேரையும் தூக்கி விட்டது பாஜக. இதில் மூத்த தலைவர் ஹர்ஷவர்த்தனும் அடக்கம். அதேபோல டிக்கெட் கிடைக்காது என்று தெரிந்துதான் அரசியலை விட்டே போவதாக முன்பே கூறி விட்டார் கெளதம் கம்பீர். இவர்கள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளதால் மீண்டும் சீட் தரவில்லையாம் பாஜக தலைமை.

மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்து, ஆப்பை எடுத்து தானே வைத்துக் கொள்ள விரும்பாததால்தான், அவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் சீட் கொடுக்காமல் நிராகரித்துள்ளதாம் பாஜக. அடிமட்ட அளவில் கிடைத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில்தான் இவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாம். நிறுத்தினால் நிச்சயம் இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதும் இன்னொரு காரணம்.
வேட்பாளர்கள் விஷயத்தில் கவனமாக இருந்தால்தான் 370 தொகுதிகளை பாஜகவால் தனித்து வெல்ல முடியும் என்றும் மேலிடம் கருதுகிறதாம். முதல் வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. அதில் 33 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் தரப்படவில்லை. அதில் முக்கியமானவர்கள் பிரக்யா தாக்கூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வெர்மா. இவர்கள் வெறுப்புப் பேச்சுகளுக்குப் பெயர் போனவர்கள் ஆவர். 2வது பட்டியலில் 30 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}