சென்னை: பதட்டத்தில் பிதற்றுகிறார் தமிழக முதல்வர். மத்திய கல்வி அமைச்சர் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார். அத்துடன் 3 கேள்விகளை கேட்டும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் அமர்வு இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக எம்பிக்கள் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. மத்திய கல்வி அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை கூறி தவறாக வழி நடத்துகிறார் என பேசினார்.
இதற்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாட்டு மாணவர்களை தவறாக வழி நடத்தி செல்கிறது திமுக அரசு. தமிழக எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என பேசினார். இதற்கு, திமுகவினர் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கடும் கண்டன ஆ,ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தும் திமுகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு 3 கேள்விகள்.
முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?
உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
மூன்றாம் கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்?
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}