சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

Nov 18, 2025,09:13 PM IST

சென்னை: சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 40-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏதேனும் மிகப்பெரும் அசம்பாவிதம் நிகழும் முன்னர், உடனடியாகத் தக்க மருத்துவ மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுத்து மக்களைக் காக்க வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.


இதே பள்ளிப்பட்டு பகுதியில் கடந்தாண்டு கழிவு நீர் கலந்த குடிநீரால் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதன்பின் கடந்த மாதம் 10 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதேபோல மீண்டுமொரு சம்பவம் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது.




கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் உறையூர் என மாவட்ட வித்தியாசமின்றித் தொடர்ந்து தமிழகத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து, அப்பாவி உயிர்கள் பலியாகி வரும் நிலையில், சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.


சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க இயலாத நிர்வாகத் திறனற்ற ஆட்சியை நடத்திக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சி என வெற்றுப் பெருமை பேசுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாணிக் குறுக வேண்டும்! இப்படி, அப்பாவிப் பொதுமக்களின் உடல்நலத்தோடும் உயிரோடும் விளையாடும் அறிவாலயத்தின் 'மீண்டுமொரு முறை ஆட்சியைப் பிடிக்கும் கனவு' கானல் நீராகவே ஆகும்! என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்