சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் என பாஜகவில் இருந்து விலகி, அதிமுக.,வில் இணைந்த தடா பெரியசாமி தடாலடியாக பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் பாஜவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் அக்கட்சி மாநில பட்டியல் இனத்தவர் அணி தலைவர் தடா பெரியசாமி.
ஒவ்வொரு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது வழக்கம். அந்த வரிசையில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த தடா பெரியசாமி, 2004இல் பாஜகவில் இணைந்தார். அப்போதிலிருந்தே பாஜகவின் மாநில பட்டியல் அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருடைய சொந்த தொகுதி சிதம்பரம் தொகுதி.ஆனால் இவருக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை. அதற்குப் பதிலாக சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளரான கார்த்தியாயினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்தார் தடா பெரியசாமி.
இந்த நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார் தடா பெரியசாமி. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்து கொண்டார்.
இது பற்றி மாநிலப் பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி கூறுகையில்,

எனக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்காததால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் நான் இன்று அதிமுகவில் இணைந்தேன். என்னுடைய ஆதரவாளர்கள் விரைவில் வந்து இணைவார்கள். என்னுடைய தொகுதி சிதம்பரம் தனி தொகுதி. இந்த சிதம்பரம் பகுதியில் பட்டியல் இனத்தவர்கள் உள்ள ஏழு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நான் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எங்கு பிரச்சாரம் செய்ய சொல்கிறார்களோ அங்கு பிரச்சாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். 2004 இல் பிஜேபியில் இணைந்தேன். அப்போதிலிருந்தே இக்காட்சிக்காக உழைத்தேன். கூடுதலான நிறைய பணிகளை செய்தேன்.
சனாதன ஒழிப்பு என்ற பெயரில் திருமாவளவனை எதிர்த்து நான் பேசினேன்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கேயோ இருந்த ஒரு பெண் உறுப்பினரைக் கொண்டு வந்து போட்டியிட வைக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தால் ஏன் வேலூர் பக்கம் பொது தொகுதியை கொடுக்கலாமே. ஏன் சிதம்பரம் தொகுதியை ஒதுக்க வேண்டும். நீங்கள் பட்டியல் இன சமுதாயத்தை அப்போ மதிக்கவில்லை. எங்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் இல்லை. இதுகுறித்து நான் அண்ணாமலையிடம் கேட்டேன்.அதற்கு அவர் இது கட்சி எடுத்த முடிவு என கூறினார். தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் என கடுமையாக குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அவர் அதிமுகவில் இணைந்து எந்த தொகுதியிலும் போட்டியிடவும் முடியாது. அதனால் தடா பெரியசாமி அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}