சென்னை: வரலாற்றை அழித்து விட்டு புராணத்தை நிறுவ முயல்கிறது பாஜக. அரசியல் லாபங்களுக்காக மட்டுமே அது ராமரைப் பயன்படுத்துகிறது என்று திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்டி வருகின்றனர். இந்தக் கோவில் தொடர்பாக திமுக எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவன் ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
என்ன சொல்வது.. அவர்கள் வரலாற்றை அழித்து விட்டனர். அதற்குப் பதில் அந்த இடத்தில் புராணத்தை நிறுவுகின்றனர். எந்த நாடாக இருந்தாலும் அதன் வரலாற்றை நினைத்து அது பெருமைப்பட வேண்டும். தனது வரலாறு என்ன என்பதை அந்த நாடு அறிந்திருக்க வேண்டும்.

ராமரின் பிறப்பு புராணம். ராமாயாணத்தில் வரும் ஒரு கதை. அது இலக்கியம். இவர்கள் வரலாற்றை காலி செய்து விட்டு புராணத்தைக் கொண்டு வருகிறார்கள். அதைத்தான் பாஜக செய்து கொண்டிருக்கிறது, செய்ய நினைக்கிறது. இப்படிப்பட்டவர்களை அதிகாரத்தில் வைத்துக் கொண்டு நாம் அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
ராமரை அரசியல் கருவியாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ராமர் மீது பக்தியெல்லாம் கிடையாது. ராமரை ஒரு விஷயமாகக் கூட பாஜக கருதுவதில்லை. ஆனால் அரசியல் லாபம் கிடைப்பதால் அதை வைத்து அரசியல் லாபம் அடையவே அது பயன்படுத்துகிறது.. அவ்வளவுதான் என்று கூறினார் இளங்கோவன்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}