டெல்லி: பாஜகவால் வருகிற லோக்சபா தேர்தலில் 230 சீட்டுகளுக்கு மேல் பெற முடியாது. அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவும் வாய்ப்பில்லை என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணி வரும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அது உறுதியானது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்.
நான் சிறையிலிருந்து வெளியே வந்து 20 மணி நேரமாகி விட்டது. பலரிடம் பேசியுள்ளேன். தேர்தல் நிபுணர்கள், மக்களிடம் பேசியுள்ளேன். அனைவருமே ஒரே குரலில் சொல்வது, பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்றுதான்.
ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பிடி நழுவுகிறது. அங்கு அவர்களுக்கு பெரிய வெற்றி கிடைக்காது. அவர்களது சீட்டுகள் இந்த முறை குறையும், அதிகரிக்காது. பாஜகவுக்கு இந்த முறை 220 முதல் 230 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது. இது எனது கணிப்பு மட்டுமல்ல, தேர்தல் நிபுணர்களின் கணிப்பும் இதுதான். மோடி அரசு ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு நீடிக்காது, மீண்டும் பதவி ஏற்காது.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்ததும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அந்தக் கனவு நிறைவேற்றப்படும். மேலும் பல அறிவித்த திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார் கெஜ்ரிவால்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}