டெல்லி: பாஜகவால் வருகிற லோக்சபா தேர்தலில் 230 சீட்டுகளுக்கு மேல் பெற முடியாது. அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவும் வாய்ப்பில்லை என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணி வரும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அது உறுதியானது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்.
நான் சிறையிலிருந்து வெளியே வந்து 20 மணி நேரமாகி விட்டது. பலரிடம் பேசியுள்ளேன். தேர்தல் நிபுணர்கள், மக்களிடம் பேசியுள்ளேன். அனைவருமே ஒரே குரலில் சொல்வது, பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்றுதான்.

ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பிடி நழுவுகிறது. அங்கு அவர்களுக்கு பெரிய வெற்றி கிடைக்காது. அவர்களது சீட்டுகள் இந்த முறை குறையும், அதிகரிக்காது. பாஜகவுக்கு இந்த முறை 220 முதல் 230 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது. இது எனது கணிப்பு மட்டுமல்ல, தேர்தல் நிபுணர்களின் கணிப்பும் இதுதான். மோடி அரசு ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு நீடிக்காது, மீண்டும் பதவி ஏற்காது.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்ததும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அந்தக் கனவு நிறைவேற்றப்படும். மேலும் பல அறிவித்த திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார் கெஜ்ரிவால்.
மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. If I had life to live over again
தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?
பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)
பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!
சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
{{comments.comment}}