டெல்லி: பாஜகவால் வருகிற லோக்சபா தேர்தலில் 230 சீட்டுகளுக்கு மேல் பெற முடியாது. அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவும் வாய்ப்பில்லை என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணி வரும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அது உறுதியானது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்.
நான் சிறையிலிருந்து வெளியே வந்து 20 மணி நேரமாகி விட்டது. பலரிடம் பேசியுள்ளேன். தேர்தல் நிபுணர்கள், மக்களிடம் பேசியுள்ளேன். அனைவருமே ஒரே குரலில் சொல்வது, பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்றுதான்.
ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தில் பாஜக பிடி நழுவுகிறது. அங்கு அவர்களுக்கு பெரிய வெற்றி கிடைக்காது. அவர்களது சீட்டுகள் இந்த முறை குறையும், அதிகரிக்காது. பாஜகவுக்கு இந்த முறை 220 முதல் 230 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது. இது எனது கணிப்பு மட்டுமல்ல, தேர்தல் நிபுணர்களின் கணிப்பும் இதுதான். மோடி அரசு ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு நீடிக்காது, மீண்டும் பதவி ஏற்காது.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்ததும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அந்தக் கனவு நிறைவேற்றப்படும். மேலும் பல அறிவித்த திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார் கெஜ்ரிவால்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}