டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் இ.ந்.தி.யா. கூட்டணி எம்.பிக்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணிப்பூர் விவகாரம் இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் நடைபெற முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அவையை முடக்கி விட்டன.
மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பொது வெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டும், பலாத்காரமாக நடத்த��்பட்டும் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசு பொருளானதால் பரபரப்பு கூடியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியும் கருத்து தெரிவித்து இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்திருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. ஆனால் ஒரு நாள் கூட சபையை முழுமையாக நடத்த முடியவில்லை. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழு அளவில் போராட்டத்தில் குதித்துள்ளன. வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அவை கோரி வருகின்றன.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் மட்டுமல்ல, ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்கு வங்காளத்திலும் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்துப் பேசலாம் என்று பாஜக தரப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால் இன்றும் இரு அவைகளும் முழுமையாக முடங்கிப் போயின.
இந்தப் போராட்டங்கள் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஷிப்ட் ஆகியுள்ளன. தங்களது கோரிக்கையை வலியுறுத்தியும், மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் எதிர்க்கட்சிகளின் இ.ந்.தி.யா. கூட்டணி எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தியபடி காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேபோல ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டித்தும், ராஜஸ்தான் அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும பாஜக எம்.பிக்களும் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தினர். இதனால் காந்தி சிலை பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}