அதானி தொடர்புடைய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த.. போரிஸ் ஜான்சனின் தம்பி ராஜினாமா!

Feb 03, 2023,12:10 PM IST
லண்டன்: அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய, இங்கிலாந்தில் இருக்கும் எலாரா கேப்பிடல் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி லார்ட் ஜோ ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். எலாரா நிறுவனத்திற்கு, தொடர்புடைய வர்த்தகத்தில் போதிய நிபுணத்துவம் இல்லை என்பதால் விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



லண்டனிலிருந்து செயல்பட்டு வருகிறது எலாரா கேப்பிடல் நிறுவனம். இது ஒரு முதலீட்டு நிறுவனமாகும். இந்திய நிறுவனங்களுக்காக கேப்பிடல் முதலீடுகளை ஈர்க்கும் நிறுவனமாக தன்னைக் கூறிக் கொள்கிறது. அதானி நிறுவனத்துடன் தொடர்புடையதாக இது கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார் ஜோ ஜான்சன். 

இந்த நிலையில் அதானி நிறுவனம் தொடர்பாக ஹின்டர்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவைக் கண்டன. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மிகப் பெரிய சரிவைக் கண்டது. இதனால் அந்த நிறுவனத்தின் FPO வெளியீட்டை நிறுத்தி வைத்தது அதானி குழுமம்.

இந்தப் பின்னணியில்தான் ஜோ ஜான்சன் தனது பதவியை உதறியுள்ளார். எலாரா நிறுவனத்திற்கு தொடர்புடைய வர்த்தகத்தில் போதிய நிபுணத்துவம் இல்லை என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாக ஜோ ஜான்சன் கூறியுள்ளார். 51 வயதான ஜோ ஜான்சன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இயக்குநராக செயல்பட்டு வந்தார்.

எலாரா நிறுவனத்தின்நிறுவனர் ராஜ் பட்.  இவர் கடந்த 2002ம் ஆண்டு எலாரா கேப்பிடல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்