ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்.. பொத்தூரில் குவிந்த ஆதரவாளர்கள்.. கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி!

Jul 07, 2024,07:11 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் என்ற இடத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் நடைபெறுகிறது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் உடன் வர சென்னை பெரம்பூரிலிருந்து அவரது உடல் பொத்தூர் எடுத்துச் செல்லப்பட்டது.


சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இதுவரை 11 பேர் சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெரம்பூர் மாநகராட்சி பள்ளிக்கூட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.


இன்று காலை முதல் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர் வெற்றி மாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் புடை சூழ ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூர் கொண்டு செல்லப்பட்டது. வழியில் மழை பெய்தபோதும் கூட கூட்டம் கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றது. முன்னதாக  இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன் கூறுகையில், உடல் அடக்கம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் தீர்ப்பளித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில், 1 ஏக்கர் பரப்பிலான இடத்தில் உடல் நல்லடக்கம் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளோம்.


நீதிபதி இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில், உடல் நல்லடக்கம் தொடர்பாக அரசு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும். இறுதி ஊர்வலம் செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். அரசு மரியாதை குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். 


பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் நினைவிடமோ அல்லது மருத்துவமனையோ அமைக்க திட்டமிட்டால் அரசை அணுகி உரிய அனுமதியைப் பெற்று மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.


இறுதிச் சடங்கையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெரம்பூர் முதல் பொத்தூர் வரையிலான பாதை நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்