டில்லி : 2024-2025ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இது இடைக்கால பட்ஜெட் தான் என்றாலும், பாஜக நடப்பு ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யும் நிறைவான பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்பதால் தேர்தல் விதிமுறைகளை மனதில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க முடியாது. அதே போல் வரி மாற்றம், அரசு கொள்கைகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது.
இருந்தாலும் 5.5 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி, 15 சதவீதம் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் வைத்து நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என சொல்லப்படுகிறது. உற்பத்தி துறையில் வளர்ச்சி, சாலை மற்றும் ரயில்வேறு திட்டங்கள், வேளாண் துறைகள், கீழ்தட்டு மக்களை முன்னேற்றுவதற்கு, பெண்கள் முன்னேற்றம், உற்பத்தி, பசுமை தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிகம் செலுத்தி இந்த பட்ஜெட் தயார் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து மற்றும் மருத்துவ துறை சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையிலும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}