டில்லி : 2024-2025ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இது இடைக்கால பட்ஜெட் தான் என்றாலும், பாஜக நடப்பு ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யும் நிறைவான பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்பதால் தேர்தல் விதிமுறைகளை மனதில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க முடியாது. அதே போல் வரி மாற்றம், அரசு கொள்கைகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது.
இருந்தாலும் 5.5 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி, 15 சதவீதம் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் வைத்து நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என சொல்லப்படுகிறது. உற்பத்தி துறையில் வளர்ச்சி, சாலை மற்றும் ரயில்வேறு திட்டங்கள், வேளாண் துறைகள், கீழ்தட்டு மக்களை முன்னேற்றுவதற்கு, பெண்கள் முன்னேற்றம், உற்பத்தி, பசுமை தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிகம் செலுத்தி இந்த பட்ஜெட் தயார் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து மற்றும் மருத்துவ துறை சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையிலும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}