டில்லி : 2024-2025ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இது இடைக்கால பட்ஜெட் தான் என்றாலும், பாஜக நடப்பு ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யும் நிறைவான பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்பதால் தேர்தல் விதிமுறைகளை மனதில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க முடியாது. அதே போல் வரி மாற்றம், அரசு கொள்கைகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது.
இருந்தாலும் 5.5 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி, 15 சதவீதம் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் வைத்து நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என சொல்லப்படுகிறது. உற்பத்தி துறையில் வளர்ச்சி, சாலை மற்றும் ரயில்வேறு திட்டங்கள், வேளாண் துறைகள், கீழ்தட்டு மக்களை முன்னேற்றுவதற்கு, பெண்கள் முன்னேற்றம், உற்பத்தி, பசுமை தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிகம் செலுத்தி இந்த பட்ஜெட் தயார் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து மற்றும் மருத்துவ துறை சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையிலும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}