சென்னை : நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு அறிவிப்புக்களோ, நிதி ஒதுக்கீடோ இடம்பெறவில்லை. இது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
2025-2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதில் மிடில் கிளாஸ் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல திட்டங்கள், அறிவிப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் மாநிலங்களுக்கு என்று பார்த்தால் பீகார் மட்டுமே அதிகம் பயனடையும் வகையிலான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
மழையை உலக உயிர்கள் விரும்புவதை போல், நல்லாட்சியையே மக்கள் விரும்புவதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இதற்கு எடுத்துக் காட்டாக திருக்குறள் ஒன்றையும் குறிப்பிட்டார்.
அதாவது,
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி" என்ற திருக்குறளை அவர் மேல்கோள் காட்டி பேசினார். இதனால் தமிழகத்திற்கு பலனளிக்கும் விதமாக ஏதாவது அறிவிப்புக்கள் இருக்குமா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் தமிழகம் குறித்த எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
சென்னை மெட்ரோ திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, விவசாயிகள், சுற்றுலாத்துறை மேம்பாடு, நெடுஞ்சாலை, கல்வி, வேலைவாய்ப்பு என எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டு வந்தது. அதுவும் சொல்லப்படவில்லை.
எல்லாமே பீகாருக்குத்தானா.. பட்ஜெட்டை விமர்சித்த தயாநிதி மாறன்
தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படாதது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் இதுகுறித்துக் கூறுகையில், இது மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய பட்ஜெட்டாக உள்ளது. டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் வரவுள்ளதால் டெல்லி வாக்காளர்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகளே இதில் இடம் பெற்றுள்ளன. அந்த மாதிரிதான் பட்ஜெட்டை வடிவமைத்துள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று கூறிய நிதியமைச்சர், அடுத்து ரூ. 8 முதல் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கிறார். இது குழப்பமாக உள்ளது. ரூ. 12 லட்சம் வரி கிடையாது என்பது நேரடியானது அறிவிப்பாக இல்லை. டிடிஎஸ் மூலமாக நடுத்தர மக்கள் இதை கிளெய்ம் செய்தாக வேண்டும். இதில் நிறைய இருக்கிறது. எளிதானதாக இது இல்லை.
எந்த வகையில் பார்த்தாலும் நடுத்தர வர்க்க மக்களை கைவிட்ட பட்ஜெட்டாகவே இது இருக்கிறது. மீண்டும் ஒரு முறை மத்திய தர வகுப்பினரை நிதியமைச்சர் ஏமாற்றியுள்ளார். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு எந்த வகையிலும் மாறப் போவதில்லை. எல்லாமே பீகாரை நோக்கியே போகிறது. காரணம் அங்கு தேர்தல் வரப் போகிறது. தமிழ்நாடு குறித்தோ, தென் மாநிலங்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்றார் தயாநிதி மாறன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}