டில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை) லேசான சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. இருந்தாலும் சிறிது நேரத்திலேயே ஏறுமுகததிற்கு திரும்பி உள்ளன.
வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், முதலீட்டாளர்கள் உடனுக்குடன் எதிர்வினையாற்ற ஏதுவாக பிஎஸ்இ (BSE) மற்றும் என்எஸ்இ (NSE) ஆகிய இரு சந்தைகளும் இன்று சிறப்பு வர்த்தகத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன.

காலை 9:15 மணி அளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 100 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி (Nifty) 35 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டன. முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிவிப்புகளுக்காகக் காத்திருப்பதால் சந்தையில் ஒருவித நிதானமான போக்கு நிலவியது. ஆனால் காலை 10.20 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 0.24 சதவீதம் உயர்ந்து 82470.90 புள்ளிகளாகவும், நிப்டி 0.16 சதவீதம் உயர்ந்து 25362.1 புள்ளிகளாகவும் இருந்தன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சுமார் 6% வரை குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. நிதியமைச்சரின் உரையில் வருமான வரிச்லுகைகள் (குறிப்பாகப் பிரிவு 87A), உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}