சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து, சவரன் 76,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,320 அதிகரித்து இருந்தது. இதனையடுத்து இன்று காலை உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை, சவரனுக்கு ரூ.520 அதிகரித்து காணப்பட்டது.

இன்று பிற்பகலில் மேலும் ஒரு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.9,470க்கும், ஒரு சவரன் ரூ.75,760க்கும் விற்பனையானது. அதே தங்கம் விலை பிற்பகல் நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.9,535க்கும், ஒரு சவரன் 76,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.130க்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}