அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

Aug 29, 2025,09:15 PM IST

சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து, சவரன் 76,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,320 அதிகரித்து இருந்தது. இதனையடுத்து இன்று காலை உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை, சவரனுக்கு ரூ.520 அதிகரித்து காணப்பட்டது. 




இன்று பிற்பகலில் மேலும் ஒரு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.9,470க்கும், ஒரு சவரன் ரூ.75,760க்கும் விற்பனையானது. அதே தங்கம் விலை பிற்பகல் நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.9,535க்கும், ஒரு சவரன் 76,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.130க்கு விற்கப்பட்டு வருகிறது.


இந்தியா-அமெரிக்கா இடையேயான வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்