சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து, சவரன் 76,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,320 அதிகரித்து இருந்தது. இதனையடுத்து இன்று காலை உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை, சவரனுக்கு ரூ.520 அதிகரித்து காணப்பட்டது.
இன்று பிற்பகலில் மேலும் ஒரு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.9,470க்கும், ஒரு சவரன் ரூ.75,760க்கும் விற்பனையானது. அதே தங்கம் விலை பிற்பகல் நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.9,535க்கும், ஒரு சவரன் 76,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.130க்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}