திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பிளஸ் மாணவி பேருந்திற்காக நின்றிருந்தார். அப்போது, அங்கே வந்த 1சி என்ற அரசு பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அங்கே காத்திருந்த பிளஸ் டூ மாணவி, பிளஸ் டூ தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து சற்று தூரம் ஓடியுள்ளார். மாணவி பின் தொடர்வதை பார்த்த ஓட்டுனர் சிறிது தூரத்திலலேயே பேருந்தை நிறுத்தி மாணவியை ஏற்றிக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில், தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பஸ் ஓட்டுநர் முனிராஜ் தற்போது சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பேருந்துதை ஓட்டிய முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக்குமார் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பேருந்தை இயக்கியதே காலதாமதமாக இயக்கியதால், நேரம் இல்லாத காரணத்தினால் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறியுள்ளனர். இதனால், ஒட்டுனர் மற்றும் நடத்துரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி உடனே பேருந்தில் இருந்து இறக்கியதாகவும், மாற்று ஓட்டுநர் மற்றும் இயக்குனரை நியமித்ததாகவும் கிளை மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
{{comments.comment}}