திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பிளஸ் மாணவி பேருந்திற்காக நின்றிருந்தார். அப்போது, அங்கே வந்த 1சி என்ற அரசு பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அங்கே காத்திருந்த பிளஸ் டூ மாணவி, பிளஸ் டூ தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து சற்று தூரம் ஓடியுள்ளார். மாணவி பின் தொடர்வதை பார்த்த ஓட்டுனர் சிறிது தூரத்திலலேயே பேருந்தை நிறுத்தி மாணவியை ஏற்றிக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில், தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பஸ் ஓட்டுநர் முனிராஜ் தற்போது சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பேருந்துதை ஓட்டிய முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக்குமார் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பேருந்தை இயக்கியதே காலதாமதமாக இயக்கியதால், நேரம் இல்லாத காரணத்தினால் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறியுள்ளனர். இதனால், ஒட்டுனர் மற்றும் நடத்துரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி உடனே பேருந்தில் இருந்து இறக்கியதாகவும், மாற்று ஓட்டுநர் மற்றும் இயக்குனரை நியமித்ததாகவும் கிளை மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}