திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பிளஸ் மாணவி பேருந்திற்காக நின்றிருந்தார். அப்போது, அங்கே வந்த 1சி என்ற அரசு பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அங்கே காத்திருந்த பிளஸ் டூ மாணவி, பிளஸ் டூ தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து சற்று தூரம் ஓடியுள்ளார். மாணவி பின் தொடர்வதை பார்த்த ஓட்டுனர் சிறிது தூரத்திலலேயே பேருந்தை நிறுத்தி மாணவியை ஏற்றிக் கொண்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில், தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பஸ் ஓட்டுநர் முனிராஜ் தற்போது சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பேருந்துதை ஓட்டிய முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக்குமார் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பேருந்தை இயக்கியதே காலதாமதமாக இயக்கியதால், நேரம் இல்லாத காரணத்தினால் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறியுள்ளனர். இதனால், ஒட்டுனர் மற்றும் நடத்துரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி உடனே பேருந்தில் இருந்து இறக்கியதாகவும், மாற்று ஓட்டுநர் மற்றும் இயக்குனரை நியமித்ததாகவும் கிளை மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}