புதுச்சேரி: புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்திய பேருந்து கட்டணத்தை இன்று அமலுக்கு கொண்டுவந்துள்ளது புதுச்சேரி அரசு.
புதுச்சேரியில் கடந்த 2018ம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இதுவரை ஆறு ஆண்டுகள் ஆகி உள்ளன. இந்த நிலையில் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பின்படி புதுச்சேரியில் அரசு பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 2 ரூபாயும், அதிகபட்சமாக 8 ரூபாயும் உயர்த்தப்பட்டது. ஏசி அல்லாத நகர பேருந்துக்கான கட்டணம் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக ரூபாய் 13 லிருந்து 17 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஏசி பேருந்துகளில் அதிகபட்சமாக கட்டணம் ரூபாய் 26 இல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி, பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12-ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36-ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் பேருந்து கட்டணம் 10 ரூபாயும், சென்னைக்கு செல்லும் பேருந்துக்கு கட்டணம் ரூபாய் ஐந்து ரூபாயும், கடலூருக்கு செல்லும் பேருந்து கட்டணம் இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}