புதுச்சேரி: புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்திய பேருந்து கட்டணத்தை இன்று அமலுக்கு கொண்டுவந்துள்ளது புதுச்சேரி அரசு.
புதுச்சேரியில் கடந்த 2018ம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இதுவரை ஆறு ஆண்டுகள் ஆகி உள்ளன. இந்த நிலையில் தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பின்படி புதுச்சேரியில் அரசு பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 2 ரூபாயும், அதிகபட்சமாக 8 ரூபாயும் உயர்த்தப்பட்டது. ஏசி அல்லாத நகர பேருந்துக்கான கட்டணம் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக ரூபாய் 13 லிருந்து 17 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஏசி பேருந்துகளில் அதிகபட்சமாக கட்டணம் ரூபாய் 26 இல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி, பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12-ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36-ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் பேருந்து கட்டணம் 10 ரூபாயும், சென்னைக்கு செல்லும் பேருந்துக்கு கட்டணம் ரூபாய் ஐந்து ரூபாயும், கடலூருக்கு செல்லும் பேருந்து கட்டணம் இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}