Bus Strike: அரசு இறங்கி வரவே இல்லை.. திட்டமிட்டபடி நாளை ஸ்டிரைக்.. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Jan 08, 2024,02:15 PM IST

சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்ட்பபடவில்லை.


இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அந்த ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இன்று இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.




இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகையில், எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. எல்லாவற்றையும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம், பேசிக் கொள்ளலாம் என்று மட்டுமே அவர்கள் தெரிவித்தனர். எங்களது ஊதிய உயர்வு கோரிக்கையை கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை மட்டுமாவது ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு அதையும் ஏற்க முன்வரவில்லை. எதைக் கேட்டாலும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று மட்டுமே கூறினர்.


இதனால் எங்களுக்கு திட்டமிட்டபடி ஸ்டிரைக்கைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்று மாலை வரை கூட அவகாசம் இல்லை. அரசாங்கம் எங்களது கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும், பரிசீலிக்க வேண்டும். எங்களுக்கு மக்களை சிரமப்படுத்துவதில் உடன்பாடு இல்லை. ஆனால் அரசுதான் அந்த நிலைக்கு எங்களைத் தள்ளுகிறது என்று அவர்கள் கூறினர்.


நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும் - அமைச்சர் சிவசங்கர்


இந்த நிலையில் நாளை வழக்கம் போல பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுகவின், தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நாளை  பணியில் ஈடுபடுவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


போக்குவரத்துத்  தொழிலாளர்களின் ஆறு கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறினோம். அதை தொமுச ஏற்றுக் கொண்டுள்ளது என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்