Bus Strike: அரசு இறங்கி வரவே இல்லை.. திட்டமிட்டபடி நாளை ஸ்டிரைக்.. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Jan 08, 2024,02:15 PM IST

சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்ட்பபடவில்லை.


இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அந்த ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இன்று இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.




இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகையில், எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. எல்லாவற்றையும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம், பேசிக் கொள்ளலாம் என்று மட்டுமே அவர்கள் தெரிவித்தனர். எங்களது ஊதிய உயர்வு கோரிக்கையை கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை மட்டுமாவது ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு அதையும் ஏற்க முன்வரவில்லை. எதைக் கேட்டாலும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று மட்டுமே கூறினர்.


இதனால் எங்களுக்கு திட்டமிட்டபடி ஸ்டிரைக்கைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்று மாலை வரை கூட அவகாசம் இல்லை. அரசாங்கம் எங்களது கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும், பரிசீலிக்க வேண்டும். எங்களுக்கு மக்களை சிரமப்படுத்துவதில் உடன்பாடு இல்லை. ஆனால் அரசுதான் அந்த நிலைக்கு எங்களைத் தள்ளுகிறது என்று அவர்கள் கூறினர்.


நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும் - அமைச்சர் சிவசங்கர்


இந்த நிலையில் நாளை வழக்கம் போல பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுகவின், தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நாளை  பணியில் ஈடுபடுவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


போக்குவரத்துத்  தொழிலாளர்களின் ஆறு கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறினோம். அதை தொமுச ஏற்றுக் கொண்டுள்ளது என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்