சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்ட்பபடவில்லை.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அந்த ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இன்று இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகையில், எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. எல்லாவற்றையும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம், பேசிக் கொள்ளலாம் என்று மட்டுமே அவர்கள் தெரிவித்தனர். எங்களது ஊதிய உயர்வு கோரிக்கையை கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை மட்டுமாவது ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு அதையும் ஏற்க முன்வரவில்லை. எதைக் கேட்டாலும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று மட்டுமே கூறினர்.
இதனால் எங்களுக்கு திட்டமிட்டபடி ஸ்டிரைக்கைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்று மாலை வரை கூட அவகாசம் இல்லை. அரசாங்கம் எங்களது கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும், பரிசீலிக்க வேண்டும். எங்களுக்கு மக்களை சிரமப்படுத்துவதில் உடன்பாடு இல்லை. ஆனால் அரசுதான் அந்த நிலைக்கு எங்களைத் தள்ளுகிறது என்று அவர்கள் கூறினர்.
நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும் - அமைச்சர் சிவசங்கர்
இந்த நிலையில் நாளை வழக்கம் போல பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுகவின், தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நாளை பணியில் ஈடுபடுவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஆறு கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறினோம். அதை தொமுச ஏற்றுக் கொண்டுள்ளது என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}