சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்ட்பபடவில்லை.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அந்த ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இன்று இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகையில், எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. எல்லாவற்றையும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம், பேசிக் கொள்ளலாம் என்று மட்டுமே அவர்கள் தெரிவித்தனர். எங்களது ஊதிய உயர்வு கோரிக்கையை கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை மட்டுமாவது ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு அதையும் ஏற்க முன்வரவில்லை. எதைக் கேட்டாலும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று மட்டுமே கூறினர்.
இதனால் எங்களுக்கு திட்டமிட்டபடி ஸ்டிரைக்கைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்று மாலை வரை கூட அவகாசம் இல்லை. அரசாங்கம் எங்களது கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும், பரிசீலிக்க வேண்டும். எங்களுக்கு மக்களை சிரமப்படுத்துவதில் உடன்பாடு இல்லை. ஆனால் அரசுதான் அந்த நிலைக்கு எங்களைத் தள்ளுகிறது என்று அவர்கள் கூறினர்.
நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும் - அமைச்சர் சிவசங்கர்
இந்த நிலையில் நாளை வழக்கம் போல பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுகவின், தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நாளை பணியில் ஈடுபடுவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஆறு கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறினோம். அதை தொமுச ஏற்றுக் கொண்டுள்ளது என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}