ஓசூர்: ஓசூரில் iphone உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு டாட்டா நிறுவனம் ரூ.7000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ போன் உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது ஒசூரில் ஐ போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக 7000 கோடி ரூபாயில் புதிய யூனிட் அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஓசூரில் உள்ள டாட்டா எலக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட் ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. இதனால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.
ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. பல்வேறு நாடுகள் இதில் பங்கேற்கின்றன. அவற்றுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு விட்டன.
நாளை காலை தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். முதலமைச்சர் மு.கஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுவார். மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}