அமைச்சர் வீட்டு சுவற்றில் மோதி.. பெரிய ஓட்டையைப் போட்ட டாக்சி!

Aug 24, 2023,02:43 PM IST
டெல்லி:  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் டெல்லி வீட்டுச் சுற்றுச் சுவர் மீது டாக்சி ஒன்று பலமாக மோதியதில், சுவரில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

சட்ட அமைச்சராக முன்பு இருந்தவர் கிரண் ரிஜிஜு. தற்போது புவி அறிவியல் துறை அமைச்சராக இருக்கிறார். அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  மத்திய டெல்லியின் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் வீடு உள்ளது.  இந்த வீட்டின் சுற்றுச் சுவர் மீது நேற்று ஒரு டாக்சி வேகமாக வந்து மோதியது. பலமாக மோதியதால் சுவரில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. சுற்றுச்சுவரும் லேசான சேதத்தை சந்தித்தது.



காரை ஓட்டி வந்தவரின் பெயர் ரஹீம் கான். இவர் இதுகுறித்துக் கூறுகையில், நானும் எனது குடும்பத்தினரும் ஹரியானா  மாநிலம் நூ நகருக்கு சென்று கொண்டிருந்தோம். அமைச்சர் வீட்டின் அருகே வந்தபோது ஒரு பஸ் எனது காரை பின்னால் இடித்து விட்டது. இதனால் எனது கார் நிலை தடுமாறி வேகமாக வந்து சுவற்றில் மோதி நின்றது என்றார்.

அமைச்சர் வீட்டுக் காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்