சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

Apr 02, 2025,06:24 PM IST

ஏற்காடு: ஏற்காடு  பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு கேம்ப் ஃபயர் நடத்த தடை  விதிக்கப்பட்டுள்ளது.


பொதுவாகவே கோடைகாலம் துவங்கி விட்டாலே மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குளுமையான கோடை வாசத்தலங்களை நோக்கி படை எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தவும், மலைப்பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


அந்த வகையில் தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், ஏற்காடு மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின்  எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு அப்பகுதிகளில் கேம்ப் ஃபயர் நடத்த தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 




முன்னதாக மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. 


அதன்படி,  வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் கேம்ப்  ஃபயர் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டுப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்