ஏற்காடு: ஏற்காடு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு கேம்ப் ஃபயர் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே கோடைகாலம் துவங்கி விட்டாலே மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குளுமையான கோடை வாசத்தலங்களை நோக்கி படை எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தவும், மலைப்பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், ஏற்காடு மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு மாதங்களுக்கு அப்பகுதிகளில் கேம்ப் ஃபயர் நடத்த தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் கேம்ப் ஃபயர் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டுப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}