தீவிரம் அடையும் காவிரி.. அடம்பிடிக்கும் கர்நாடகா.. அப்பீலுக்குத் தயாராகும் தமிழகம்

Aug 30, 2023,10:30 AM IST
டெல்லி : தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருவதால், காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 5000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.  



ஆனால் தமிழகத்திற்கு 5000 கனஅடி காவிரி நதிநீர் திறப்பது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவு குறித்து முதல்வர் சித்தராமையா மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதற்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.ஏ.சிவக்குமார் தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகா தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 01 ம் தேதி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்