மணிப்பூர் பெண்கள் நிர்வாண  சம்பவம்.. விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Jul 29, 2023,04:33 PM IST
டெல்லி: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக  வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள் எரிக்கப்பட்டு விட்டன. பெண்கள் மிகப் பெரிய அளவில் பாலியல் ரீதியாக கொடூரங்களுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலையில்தான் சமீபத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி மிகக் குரூரமாக ஒரு ஆண் கும்பல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் என பலரும் இந்த கொடூரமான சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி விட்டது. கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளதால் இதுகுறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்