மணிப்பூர் பெண்கள் நிர்வாண  சம்பவம்.. விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Jul 29, 2023,04:33 PM IST
டெல்லி: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக  வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள் எரிக்கப்பட்டு விட்டன. பெண்கள் மிகப் பெரிய அளவில் பாலியல் ரீதியாக கொடூரங்களுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலையில்தான் சமீபத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி மிகக் குரூரமாக ஒரு ஆண் கும்பல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் என பலரும் இந்த கொடூரமான சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி விட்டது. கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளதால் இதுகுறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்