மணிப்பூர் பெண்கள் நிர்வாண  சம்பவம்.. விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Jul 29, 2023,04:33 PM IST
டெல்லி: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக  வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள் எரிக்கப்பட்டு விட்டன. பெண்கள் மிகப் பெரிய அளவில் பாலியல் ரீதியாக கொடூரங்களுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலையில்தான் சமீபத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி மிகக் குரூரமாக ஒரு ஆண் கும்பல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் என பலரும் இந்த கொடூரமான சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை மணிப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி விட்டது. கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளதால் இதுகுறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்