சென்னை: பான் டி, பாராசிட்டமால் 500 உள்ளிட்ட 59 வகையான மாத்திரைகள் தரக்குறைவானவை என்று தெரிய வந்துள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. இதுதவிர நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த 59 வகையான மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சோதனைக்குட்படுத்தப்பட்ட மாத்திரைகள் போலியானவை என்றும் தங்களது தயாரிப்புகள் தரம் வாய்ந்தவை என்றும் மறுத்துள்ளன.

வெளிநாடுகளில் டாக்டர்கள் கொடுக்கும் மருந்தைத்தான் நாம் பயன்படுத்த முடியும். மெடிக்கல் ஷாப்களில் போய் நம் இஷ்டத்திற்கு எந்த மாத்திரை, மருந்தையும் வாங்க முடியாது. ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. இங்கு டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களை விட கவுன்டர் சேல்ஸ் எனப்படும் மெடிக்கல் ஷாப்களில் போய் அவர்களே வாங்கி சாப்பிடுவோர்தான் அதிகம். வயிறு சரியில்லாவிட்டால், ஒரு பான் டி யை வாங்கி வாயில் போட்டு, நாலு ஏப்பம் வந்ததும், ஓகே இப்ப வயிறு சரியாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு பிறகு சாப்பிடுவோர் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
இந்த மாத்திரைகளையெல்லாம் பெரும்பாலானவர்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. அப்படி மக்களால் அதிகம் வாங்கப்படும் மாத்திரைகளாக பாராசிட்டமால், பான் டி உள்ளிட்டவை உள்ளன. அப்படிப்பட்ட மாத்திரைகள் தரம் குறைந்தவையாக உள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 59 வகையான மாத்திரைகளில் பான் டி, பாராசிட்டமால் தவிர ஆன்டிபயாட்டிக்குகள், பிபி மாத்திரைகள், சர்க்கரை நோய் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவையும் அடக்கம். மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இந்த அறிக்கையால் தற்போது விற்பனையில் உள்ள மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விற்பனையிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}