சென்னை: பான் டி, பாராசிட்டமால் 500 உள்ளிட்ட 59 வகையான மாத்திரைகள் தரக்குறைவானவை என்று தெரிய வந்துள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. இதுதவிர நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த 59 வகையான மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சோதனைக்குட்படுத்தப்பட்ட மாத்திரைகள் போலியானவை என்றும் தங்களது தயாரிப்புகள் தரம் வாய்ந்தவை என்றும் மறுத்துள்ளன.
வெளிநாடுகளில் டாக்டர்கள் கொடுக்கும் மருந்தைத்தான் நாம் பயன்படுத்த முடியும். மெடிக்கல் ஷாப்களில் போய் நம் இஷ்டத்திற்கு எந்த மாத்திரை, மருந்தையும் வாங்க முடியாது. ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. இங்கு டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களை விட கவுன்டர் சேல்ஸ் எனப்படும் மெடிக்கல் ஷாப்களில் போய் அவர்களே வாங்கி சாப்பிடுவோர்தான் அதிகம். வயிறு சரியில்லாவிட்டால், ஒரு பான் டி யை வாங்கி வாயில் போட்டு, நாலு ஏப்பம் வந்ததும், ஓகே இப்ப வயிறு சரியாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு பிறகு சாப்பிடுவோர் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
இந்த மாத்திரைகளையெல்லாம் பெரும்பாலானவர்கள் இஷ்டத்திற்கு சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. அப்படி மக்களால் அதிகம் வாங்கப்படும் மாத்திரைகளாக பாராசிட்டமால், பான் டி உள்ளிட்டவை உள்ளன. அப்படிப்பட்ட மாத்திரைகள் தரம் குறைந்தவையாக உள்ளதாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 59 வகையான மாத்திரைகளில் பான் டி, பாராசிட்டமால் தவிர ஆன்டிபயாட்டிக்குகள், பிபி மாத்திரைகள், சர்க்கரை நோய் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவையும் அடக்கம். மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இந்த அறிக்கையால் தற்போது விற்பனையில் உள்ள மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விற்பனையிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}