மோடி, அமித் ஷாதான் முடிவெடுப்பார்கள்.. அண்ணாமலைக்கு பவர் கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி

Apr 03, 2023,11:26 AM IST
சேலம்:  கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள். மாநிலத்தில் உள்ளவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக  கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவுகிறது. இதற்குக் காரணம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனித்துப் போட்டியிட விரும்புவதாக பேசியதால். இந்தப் பேச்சை பாஜகவினரே கூட ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவினரும் அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அதுகுறித்து நேற்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை  என்று அமித் ஷா இறுதியாக அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவெடுப்பார்கள். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்று மீண்டும் அதிமுகவை சீண்டும் வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,  தேசியத் தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர்தான் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். சில ஆலோசனைகளையும் கொடுத்துள்ளனர். மத்தியில் உள்ள தலைவர்கள்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளனர்.

நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். கூட்டணி குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்று அழுத்தம் திருத்தமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்