டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ள துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மானு பாக்கருக்குப் பின்னணியில், அவரது நீண்ட கால போராட்டம் மட்டுமல்லாமல் மிகப் பெரிய அளவிலான பயிற்சியும் அடங்கியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் மானு பாக்கர். இது இந்தியாவுக்கு முதல் பதக்கமாகும். மானு பாக்கர் கடந்த ஒலிம்பிக் போட்டியின்போது துப்பாக்கி சரியாக சுட முடியாமல் போனதால் போட்டியிலிருந்து வெளியேறினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் மிகப் பெரிய அளவில் பயிற்சி கொடுத்து நடப்பு ஒலிம்பிக் போட்டியில் களம் இறக்கப்பட்டார் மானு பாக்கர். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மானு பாக்கருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து மத்திய வெளியாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா கூறுகையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார் மானு. இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டவர் மானு.
நாட்டின் விளையாட்டு அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டதுதான் கேலோ இந்தியா. பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளுக்காக உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல பயிற்சிகள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. சர்வதேச தரத்திலான பயிற்சி தரப்படுகிறது.
மானுவுக்கும் கூட ரூ. 2 கோடி வரை பயிற்சிக்காக செலவிடப்பட்டது. ஜெர்மனிக்கும், சுவிட்சர்லாந்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவருக்குப் பயிற்சி தரப்பட்டது. அவருக்குப் பிடித்த பயிற்சியாளர் அமர்த்தப்பட்டார். அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் இதுபோன்ற தரமான பயிற்சி தரப்பட்டது. மற்ற வீரர், வீராங்கனைகளும் கூட இந்த ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என்றார் அமைச்சர் மாண்டவ்யா.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}