அதிர வைத்த சர்வதேச கால்கள்.. வாட்ஸ் ஆப்பிடம் விளக்கம் கேட்கும் மத்திய  அரசு!

May 12, 2023,09:51 AM IST
டெல்லி:  வாட்ஸ் ஆப்களில் வந்து கொண்டிருக்கும் தேவையில்லாத சர்வதேச கால்கள் குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பலருக்கும் சர்வதேச நம்பர்களிலிலிருந்து தேவையில்லாத அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த அழைப்புகளால் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் பெரும் குழப்பமும் பீதியும் அடைந்துள்ளனர். இந்த சர்வதேச கால்களை யார் செய்வது, எதற்காக செய்கிறார்கள் என்று புரியவில்லை. 



பல்வேறு நம்பர்களிலிருந்து அடுத்தடுத்து கால்கள்  வருகின்றன.  ஒவ்வொரு அழைப்பும் வந்து வந்து கட் ஆகிறது. இவற்றை அட்டென்ட் செய்தால் அது நமது போனை ஸ்பாம் செய்து அதில் உள்ள டேட்டாக்களைத் திருடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வங்கிக் கணக்கு உள்ளிட்டவை இருந்தால் நமது பணம் அபகரிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது மத்திய அரசு  ஆக்ஷனில் குதித்துள்ளது. மர்மமான சர்வதேச கால்கள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், டிஜிட்டல் ஊடகங்கள் அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவற முடியாது. வாட்ஸ்ஆப் சர்வதேச கால்கள் விவகாரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

பெரும்பாலான சர்வதேச கால்கள் இந்தோனேசியா (கோட் நம்பர் 62), வியட்நாம் (84), எத்தியோப்பியா (251), கென்யா (254), மலேசியா (60), அங்கோலா (244), அல்ஜீரியா (213) ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்