புதுச்சேரியில்.. சென்னை உயர்நீதிமன்றக் கிளை.. மத்திய அரசு பரிசீலிக்கும்

Jan 20, 2023,02:13 PM IST
புது்சசேரி: புதுச்சேரியில், சென்னை உயர்நீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.



புதுச்சேரியில் வழக்கறிஞர் சேம்பர் கட்டட பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  பேசிய அவர், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில், சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், மாவட்ட கீழமை நீதிமன்றங்களில், நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க, 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் ஏழை மக்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சியில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

நீதித்துறையில் பெண் வழக்கறிஞர்கள் பெருமளவு வரவேண்டும். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான அலுவலகம் மிகவும் அவசியம். வழக்கறிஞர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் மத்திய அரசு முனைப்போடு செயல்படுகிறது.

புதுச்சேரியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை நிறுவ வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் அமைச்சர். விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்