சென்னை: கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயது சிறுமிகள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 36 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2025 - 2026 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார்.அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் திமுக தலைமையிலான் அரசு 5ஆவது மற்றும் கடைசி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் தமிழக மகளீர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயது சிறுமிகள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் பத்தாயிரம் புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும். இந்த மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூபாய் 37,000 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்படும்.
விடியல் பயணத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் 50 லட்சம் மகளிர் பயணம் செய்து பயனடையும் வகையில், ரூபாய் 3600 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது
ரூ. 10 லட்சம் வரையிலான வீடு, வீட்டு மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துக்களை பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்திலிருந்து 1 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். 1.4.2025 முதல் இது அமலுக்கு வரும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.
கோவை, மதுரை, திருச்சி,சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 25 அன்புச்சோலை மையம் அமைக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தோர் ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவர் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}