"18 மணி நேரமாக அரசு இல்லை.. ஆட்சியமைக்க அழையுங்கள்".. ஜார்க்கண்ட் ஆளுநரிடம் முறையிட்ட சாம்பாய்!

Feb 01, 2024,06:04 PM IST

ராஞ்சி: கடந்த 18 மணி நேரமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அமைக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளேன். என்னை அரசமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அக்கட்சி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான சாம்பாய் சோரன்.


ஜார்க்கண்ட் முதல்வராக இருந்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அக்கட்சியின் சீனியர் லீடரான சாம்பாய் சோரன் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவே ஆளுநரை சந்தித்து தனக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி கடிதத்தையும் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார் சாம்பாய் சோரன்.


ஆனால் இதுவரை சாம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க உத்தரவிடவில்லை. இந்த நிலையில் இன்று மாலை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார் சாம்பாய் சோரன். ஆனால் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சாம்பாய் சோரனுடன், 5 எம்எல்ஏக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.




இதையடுத்து அவர்கள் ஆளுநரை சந்தித்து உடனடியாக தங்களுக்கு ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தினர். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதத்தையும் சாம்பாய் சோரன், ஆளுநரிடம் ஒப்படைத்தார்.


பின்னர் செய்திாயளர்களிடம் சாம்பாய் சோரன் பேசுகையில், கடந்த 18 மணி நேரமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அமைக்கப்படாமல் உள்ளது. மாநிலத்தில் குழப்பமான சூழல் எழுந்துள்ளது.  ஆளுநரிடம் இதை எடுத்துக் கூறினோம். உடனடியாக அரசமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவரை வலியுறுத்தினோம்.


81 உறுப்பினர்கள் கொண்ட சபையில் எங்களுக்கு மெஜாரிட்டி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 47 பேரும் ஆட்சியமைக்க ஆதரவாக உள்ளனர்.  இது மெஜாரிட்டியை விட கூடுதலான நம்பர்தான். அனைவருமே இன்று என்னுடன் வந்தனர். ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை என்றார் சாம்பாய் சோரன்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்