"18 மணி நேரமாக அரசு இல்லை.. ஆட்சியமைக்க அழையுங்கள்".. ஜார்க்கண்ட் ஆளுநரிடம் முறையிட்ட சாம்பாய்!

Feb 01, 2024,06:04 PM IST

ராஞ்சி: கடந்த 18 மணி நேரமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அமைக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளேன். என்னை அரசமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அக்கட்சி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான சாம்பாய் சோரன்.


ஜார்க்கண்ட் முதல்வராக இருந்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அக்கட்சியின் சீனியர் லீடரான சாம்பாய் சோரன் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவே ஆளுநரை சந்தித்து தனக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி கடிதத்தையும் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார் சாம்பாய் சோரன்.


ஆனால் இதுவரை சாம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க உத்தரவிடவில்லை. இந்த நிலையில் இன்று மாலை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார் சாம்பாய் சோரன். ஆனால் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சாம்பாய் சோரனுடன், 5 எம்எல்ஏக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.




இதையடுத்து அவர்கள் ஆளுநரை சந்தித்து உடனடியாக தங்களுக்கு ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தினர். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதத்தையும் சாம்பாய் சோரன், ஆளுநரிடம் ஒப்படைத்தார்.


பின்னர் செய்திாயளர்களிடம் சாம்பாய் சோரன் பேசுகையில், கடந்த 18 மணி நேரமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அமைக்கப்படாமல் உள்ளது. மாநிலத்தில் குழப்பமான சூழல் எழுந்துள்ளது.  ஆளுநரிடம் இதை எடுத்துக் கூறினோம். உடனடியாக அரசமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவரை வலியுறுத்தினோம்.


81 உறுப்பினர்கள் கொண்ட சபையில் எங்களுக்கு மெஜாரிட்டி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 47 பேரும் ஆட்சியமைக்க ஆதரவாக உள்ளனர்.  இது மெஜாரிட்டியை விட கூடுதலான நம்பர்தான். அனைவருமே இன்று என்னுடன் வந்தனர். ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை என்றார் சாம்பாய் சோரன்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்