சென்னை: மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று (14-3-2024) முதல் 19-03-2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 20ம் தேதி அன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 16.03.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிமாக இருக்கக் கூடும். இன்று முதல் மார்ச் 18ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டையைப் பொளக்கும் வெயில்
இதற்கிடையே, தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வருகிறது. பல ஊர்களிலும் அனல் கக்க ஆரம்பித்து விட்டது வெயில் பல நகரங்களில் இப்போதே வெயில் 100 டிகிரியைத் தாண்டி அடித்து வருவதால், சம்மரில் இன்னும் அதிக உஷ்ணத்தை தாங்க வேண்டியிருக்குமே என்று மக்கள் அயர்ச்சியாகியுள்ளனர்.
அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், தாகம் எடுக்காவிட்டாலும் கூட அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வெயிலில் போய் விட்டு வந்ததும் ஐஸ் வாட்டர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}