பிச்சுக்கிட்டுக் கொட்டும் அதிர்ஷ்டம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு அடித்த ஜாக்பாட்!

Jun 13, 2024,06:11 PM IST
அமராவதி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு  நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு, லோக்சபா மற்றும் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் சந்தித்த ஏற்றத்தால் அவரது குடும்பம் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளதாம்.

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வென்றுள்ளது. இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக நேற்று பதவியேற்றுள்ளார். சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும்  வந்திருந்தனர்.



இந்நிலையில், சந்திரபாபு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் கடந்த 1992ல் தொடங்கப்பட்டது. தயிர், நெய், பனீர் உள்ளிட்ட பால்பொருட்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். தற்போது ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின்  பங்குகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. இதனால் அந்நிறுவனத்தில் 35.7 சதவீத பங்குகளை வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.727.9ஐ எட்டியதால்  சந்திரபாபு நாயுடு குடும்பம் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 34.37% பங்குகளும், மகன் லோகேஷ்சுக்கு 10.82% பங்குகளும், மறுமகள் பிராமணிக்கு 0.46 சதவீத பங்குகளும், அவரது 9 வயது பேரன் தேவன்ஷூக்கு 0.06 சதவீத பங்குகளும் உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. அந்த வகையில் சந்திரபாபு நாயுடு தேர்தலில் வெற்றி பெற்றதன் எதிரொலியாக ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3 அன்று ரூ.2.4 கோடியாக இருந்தது தற்போது அது ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது இந்தக் குட்டிப் பையன் பங்கு மதிப்பு ரூ. 4.1 கோடியாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்