வெற்றி.. புவி வட்டப் பாதையில் விடப்பட்டது சந்திரயான் 3.. ஆக. 23ல் லேன்டர் நிலவில் இறங்கும்!

Jul 14, 2023,02:52 PM IST
டெல்லி : இஸ்ரோவின் மற்றொரு வரலாற்று சாதனையாக சந்திரயான் 3 விண்கலம் இன்று தனது பயணத்தை தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து எல்விம் 3 எம் 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3  விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, புவி வட்டப் பாதையில்  வெற்றிகரமாக விடப்பட்டது.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் இந்த விண்கலம் இன்று பிற்பகல் 02.35 மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது. விண்கலத்தை ஏவும் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள். சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட குழுவினர் பெருமளவில் திரண்டிருந்தனர்.
 


சந்திரயான் 3  விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் ஒவ்வொரு கட்டமும் வெற்றிகரமாக நடந்தேறியது. கடைசியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, புவி வட்டப் பாதையில் விண்கலம் வெற்றிகரமாக விடப்பட்டது. இதையடுத்து சந்திரயான் 3 விண்கலம் ஏவும் பணி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதை அறிவித்தபோது அவருடன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலும் உடன் இருந்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தார். பேசவே முடியாமல் சிரித்த அவரது முகத்தில் தெறித்த உற்சாகம் நாடு முழுவதும் மகிழ்ச்சியில் துள்ள வைத்துள்ளது.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் நான்காவது விண்கலம் இதுவாகும். சந்திரயான் 3 ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 05.47 மணிக்கு சந்திரனில் தரையிறங்க உள்ளது. அங்கு 40 நாட்கள் தனது பயணத்தை சந்திரயான் 3 விண்கலம் மேற்கொள்ளும்.

இதற்கு முன் 2019 ல் சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது செயல் இழந்ததால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. நாட்டு மக்களை பெரும் ஏமாற்றத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியது இது.  அப்போது இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவன் பெரும் வேதனையில் கண்ணீர் விட்டு அழுததை நாடே சோகத்துடன் பார்த்தது. பிரதமர் நரேந்திர மோடி அவரைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறியதை யாராலும் மறக்க முடியாது.



இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி அடைந்தால் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும். 

சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைய பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா வழியாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டதை நாடே டிவி மூலம் நேரடியாக கண்டு மகிழ்ந்தது. சமூக வலைதளங்களிலும் இது மிகப் பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்டது.

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் கூட வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்