சென்னை: ஆந்திராவில் பிறந்து அகில இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு மீண்டும் படமாகவுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான தமிழ் வம்சாவளி நடிகை சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கவுள்ளார்.
மறைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் உயிருடன் இருந்திருந்தால் தனது 64வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். ஆந்திர மாநிலம் காவாலி என்ற ஊரில் விஜயலட்சுமியாக பிறந்தவர், வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் என்ற பெயரில் உருமாறி குறுகிய காலத்தில் பெரும் புகழ் பெற்றார். எப்படி இளையராஜா இல்லாமல் அப்போது படங்கள் வருவது அரிதோ அதுபோலத்தான் சில்க் இல்லாத படத்தைப் பார்ப்பதே அரிதாகும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சில்க் ஸ்மிதாவுக்கு பெரும் கிராக்கி இருந்தது. அவரது நடனம் இடம் பெறாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிசியாக இருந்து வந்தவர். அத்தனை முன்னணி சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்தவர். வித்தியாசமான படங்களிலும் நடித்து தனக்கு நடனம் மட்டுமல்ல, நடிப்பும் வரும் என்பதை நிரூபித்த அருமையான நடிகை.
ஜஸ்ட் 35 வயதில் தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணம் ரசிகர்களை கலங்கடித்தது. எத்தனையோ சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் அவரது மறைவுக்கு அவர்கள் யாருமே வரவில்லை. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு பெரிய அளவில் சினிமாவாக வந்தது இல்லை. வித்யா பாலன் நடிக்க டர்ட்டி பிக்சர்ஸ் என்ற ஒரு படம் மட்டுமே வந்துள்ளது.
இந்த நிலையில் சில்க் ஸ்மிதா என்ற பெயரிலேயே இப்போது ஒரு புதிய படம் வரவிருக்கிறது. STRI சினிமாஸ் இந்தப் படத்தை உருவாக்கவுள்ளது. சில்க் ஸ்மிதா – Queen of the South என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் நடிகை சந்திரிகா ரவி சில்க் வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், எஸ்.பி. விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப் படங்களை அதிக அளவில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமான நடிகை சந்திரிகா ரவி, தெலுங்கில் சில படங்களில் நடனமாடியுள்ளார். என்டிஆர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படத்தில் ஒரு குத்துப் பாட்டு ஆடியுள்ளார். இப்போது சில்க் ஸ்மிதா அவதாரமெடுக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}