சென்னை வந்தார் புரட்சி நாயகன் சேகுவாரா மகள்..நாளை பாராட்டு விழா..

Jan 17, 2023,01:45 PM IST
சென்னை: புரட்சி நாயகன் சே குவராவின் மகள் அலைடா குவரா சென்னை வந்துள்ளார்.



சே குவராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கியூபப் புரட்சி நாயகனான சே குவரா இன்றைய இளைஞர்களுக்கும் நாயகனாக இருக்கிறார். அவரது மகள்தான் டாக்டர் அலைடா குவரா. அவர் தற்போது இந்தியா வந்துள்ளார். திருவனந்தபுரம் வந்திருந்த அவர் 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

இன்றும் நாளையும் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். சென்னை வந்த அவருக்கு  விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதன்கிழமை அவருக்கு பொதுமக்கள் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்  கலந்து கொள்ளவுள்ளனர்.

அதிகம் பார்க்கும் செய்திகள்