சென்னை வந்தார் புரட்சி நாயகன் சேகுவாரா மகள்..நாளை பாராட்டு விழா..

Jan 17, 2023,01:45 PM IST
சென்னை: புரட்சி நாயகன் சே குவராவின் மகள் அலைடா குவரா சென்னை வந்துள்ளார்.



சே குவராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கியூபப் புரட்சி நாயகனான சே குவரா இன்றைய இளைஞர்களுக்கும் நாயகனாக இருக்கிறார். அவரது மகள்தான் டாக்டர் அலைடா குவரா. அவர் தற்போது இந்தியா வந்துள்ளார். திருவனந்தபுரம் வந்திருந்த அவர் 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

இன்றும் நாளையும் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். சென்னை வந்த அவருக்கு  விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதன்கிழமை அவருக்கு பொதுமக்கள் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்  கலந்து கொள்ளவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

வீட்டின் வாசலில் நின்றாலும்.. வானம் வரை நீளும் கனவுகள்!

news

கைகள் மெலிந்தாலும், கனவுகள் வலிமை கொண்டவை.. பெண் குழந்தைகள்!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்