சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான புறநகர் ரயில் போக்குவரத்து காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது இங்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட தொடர்ச்சியாக சில நாட்கள் இங்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பீச் - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் திரும்பி வரும் ரயில்கள் குறித்த அட்டவணையின்படி ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக, சிறப்பு பயணிகள் ரயில்கள், சென்னை பீச் - பல்லவாரம் - சென்னை பீச் மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் காலை 6.15 முதல் இரவு 8.35 வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}