சென்னை பீச் - தாம்பரம் புறநகர் ரயில்கள்.. நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து!

Sep 21, 2024,08:46 PM IST

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான புறநகர் ரயில் போக்குவரத்து காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.


தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது இங்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.




சமீபத்தில் கூட தொடர்ச்சியாக சில நாட்கள் இங்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பீச் - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் திரும்பி வரும் ரயில்கள் குறித்த அட்டவணையின்படி ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக, சிறப்பு பயணிகள் ரயில்கள், சென்னை பீச் - பல்லவாரம் - சென்னை பீச் மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் காலை 6.15 முதல் இரவு 8.35 வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்