சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான புறநகர் ரயில் போக்குவரத்து காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது இங்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் கூட தொடர்ச்சியாக சில நாட்கள் இங்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பீச் - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் திரும்பி வரும் ரயில்கள் குறித்த அட்டவணையின்படி ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக, சிறப்பு பயணிகள் ரயில்கள், சென்னை பீச் - பல்லவாரம் - சென்னை பீச் மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் காலை 6.15 முதல் இரவு 8.35 வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}