சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான புறநகர் ரயில் போக்குவரத்து காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது இங்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட தொடர்ச்சியாக சில நாட்கள் இங்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பீச் - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் திரும்பி வரும் ரயில்கள் குறித்த அட்டவணையின்படி ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக, சிறப்பு பயணிகள் ரயில்கள், சென்னை பீச் - பல்லவாரம் - சென்னை பீச் மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் காலை 6.15 முதல் இரவு 8.35 வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}