சாப்பாடு கொடுத்தால் மட்டும் போதாது.. நாய்களைத் தத்தெடுங்கள்.. டாக்டர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

Nov 26, 2023,04:54 PM IST


சென்னை: தெருவில் திரியும் நாய்களுக்கு சாப்பாடு மட்டும் கொடுத்து விட்டுப் போவதால் எந்த பலனும் இல்லை. அந்த நாய்களை தத்தெடுத்து முறையாக வளர்க்க நாய் ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை மாநகரில் சமீப காலமாக நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட ரேபிஸ் தாக்கிய நாய் ஒன்று 29 பேரைக் கடித்து காயப்படுத்தியது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்க்கு ரேபிஸ் தாக்கியிருந்ததால், இந்த 29 பேருக்கும் 5 ஊசிகள் போட பரிந்துரைக்கப்பட்டது.




நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு நாய்களின் எண்ணிக்கை குறித்த சென்சஸ் எடுக்கப்பட்டது. மீண்டும் அந்த சென்சஸ் எடுக்கவுள்ளோம். நாளை முதல் அது தொடங்குகிறது.


நாய்க்கடி பிரச்சினையைத் தடுக்க ஒரே வழி அவற்றுக்கு கருத்தடை செய்வதே. அதேசமயம், இதை எல்லா நாய்களிடமும் செய்ய முடியாது. குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் நாய்களிடம் கருத்தடை செய்ய முடியாது.   இதுபோன்று விடப்படும் நாய்கள் மூலம் நமக்கு பிரச்சினை உருவாகி விடுகிறது. ஒரு நாயானது தனது வாழ்நாளில் 500 குட்டிகள் வரை ஈணும்.


தொடர்ந்து நாய்களின் பெருக்கம் குறித்து கண்காணித்துக் கொண்டுதான் உள்ளோம். நாய்ப் பிரியர்கள், தெருவில் திரியும் நாய்களுக்கு பிஸ்கட், சாப்பாடு போன்றவற்றை கொடுப்பதோடு போய் விடுகிறார்கள். அது பலன் தராது. மாறாக அனைவரும் சேர்ந்து தெருவோர நாய்களை தத்தெடுத்து வளர்க்க முன்வர வேண்டும். அப்படிச் செய்வதால் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குக் குறைக்க முடியும்.


ராயபுரத்தில் நாய் கடித்த 29 பேரும் நலமாக உள்ளார்கள். அவர்களுக்கு 2வது டோஸ் ஊசியும் போடப்பட்டு விட்டது. தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வருகிறோம் என்றார் ராதாகிருஷ்ணன். கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட நாய் கணக்கெடுப்பின்போது சென்னை மாநகரில் 58,000 நாய்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால் தற்போது அதை விட அதிகமாகவே நாய்கள் இருக்கும் என்று தெரிகிறது.


சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்