சாப்பாடு கொடுத்தால் மட்டும் போதாது.. நாய்களைத் தத்தெடுங்கள்.. டாக்டர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

Nov 26, 2023,04:54 PM IST


சென்னை: தெருவில் திரியும் நாய்களுக்கு சாப்பாடு மட்டும் கொடுத்து விட்டுப் போவதால் எந்த பலனும் இல்லை. அந்த நாய்களை தத்தெடுத்து முறையாக வளர்க்க நாய் ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை மாநகரில் சமீப காலமாக நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட ரேபிஸ் தாக்கிய நாய் ஒன்று 29 பேரைக் கடித்து காயப்படுத்தியது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்க்கு ரேபிஸ் தாக்கியிருந்ததால், இந்த 29 பேருக்கும் 5 ஊசிகள் போட பரிந்துரைக்கப்பட்டது.




நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு நாய்களின் எண்ணிக்கை குறித்த சென்சஸ் எடுக்கப்பட்டது. மீண்டும் அந்த சென்சஸ் எடுக்கவுள்ளோம். நாளை முதல் அது தொடங்குகிறது.


நாய்க்கடி பிரச்சினையைத் தடுக்க ஒரே வழி அவற்றுக்கு கருத்தடை செய்வதே. அதேசமயம், இதை எல்லா நாய்களிடமும் செய்ய முடியாது. குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் நாய்களிடம் கருத்தடை செய்ய முடியாது.   இதுபோன்று விடப்படும் நாய்கள் மூலம் நமக்கு பிரச்சினை உருவாகி விடுகிறது. ஒரு நாயானது தனது வாழ்நாளில் 500 குட்டிகள் வரை ஈணும்.


தொடர்ந்து நாய்களின் பெருக்கம் குறித்து கண்காணித்துக் கொண்டுதான் உள்ளோம். நாய்ப் பிரியர்கள், தெருவில் திரியும் நாய்களுக்கு பிஸ்கட், சாப்பாடு போன்றவற்றை கொடுப்பதோடு போய் விடுகிறார்கள். அது பலன் தராது. மாறாக அனைவரும் சேர்ந்து தெருவோர நாய்களை தத்தெடுத்து வளர்க்க முன்வர வேண்டும். அப்படிச் செய்வதால் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குக் குறைக்க முடியும்.


ராயபுரத்தில் நாய் கடித்த 29 பேரும் நலமாக உள்ளார்கள். அவர்களுக்கு 2வது டோஸ் ஊசியும் போடப்பட்டு விட்டது. தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வருகிறோம் என்றார் ராதாகிருஷ்ணன். கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட நாய் கணக்கெடுப்பின்போது சென்னை மாநகரில் 58,000 நாய்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால் தற்போது அதை விட அதிகமாகவே நாய்கள் இருக்கும் என்று தெரிகிறது.


சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்