ஓட்டுப் போட்டு கெத்து காட்ட நீங்க தயாரா.. அசத்தலான ஆக்ஷனில் குதித்த சென்னை மாநகராட்சி!

Apr 08, 2024,05:37 PM IST

சென்னை: சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி பிரச்சாரத்தில் குதித்துள்ளது.


தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்களை விட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.  ஒவ்வொரு தேர்தலின்போதும் சென்னையில் பதிவாகும் வாக்குகள்தான் பேசு பொருளாக இருக்கும். சென்னையில் வாக்குப் பதிவு குறைந்து விட்டது, எப்போதும் இவர்கள் இப்படித்தான் என்ற பெயர் ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.


இந்த முறை சென்னையில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சி தன்னால் ஆன அனைத்து வழிகளையும் பயன்படுத்தி சிறப்பான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.




குறிப்பாக வெளியூர்க்காரர்கள் வாக்களிப்பதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக இப்போதே பஸ், ரயில்களில் டிக்கெட் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது மாநகராட்சி. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அது போட்டுள்ளது. அதில்,  

ஏப்ரல் 19ஆம் தேதி ஓட்டு போட்டு உங்க கெத்த காட்ட ஊருக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா மக்களே??  என்று கூறியுள்ள மாநகராட்சி இதுதொடர்பாக சிலரிடம் எடுத்த பேட்டியையும் அதில் இணைத்துள்ளது.


அதில் பேசும் ஒரு பெண் தான் கள்ளக்குறிச்சி என்றும் கண்டிப்பாக ஓட்டுப் போடப் போவேன் என்றும் கடந்த முறை கர்ப்பம் தரித்த நிலையிலும் கூட சொந்த ஊருக்குப் போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்ததாகவும் கூறுகிறார்.


என்ன மக்களே.. நீங்களும் வெளியூரா.. மறக்காமல் சொந்த ஊருக்குப் போய் கண்டிப்பாக உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற மறவாதீர்கள்.. இது உங்களுக்கு ஜனநாயகம் கொடுத்துள்ள உரிமையை. மறக்காமல் பயன்படுத்துங்க.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்