சென்னை: 92வது விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது டெல்லி உட்பட பல முக்கிய விமான தளங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த வருடம் மெரினா கடற்கரையில் முதன் முதலாக விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு பாராசூட் சாகசத்துடன் தொடங்கி மதியம் 1 வரை நடைபெற்றது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை நடத்தியது.
மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தனர். இதையொட்டி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மெரினா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட 18.5 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்காக 128 தூய்மை பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்திய பின்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவோர் முடிந்தவரை குப்பைகளை அப்படியே போடாமல் ஒரு பையில் போட்டுக் கொண்டு எடுத்து போய் குப்பைத் தொட்டியில் போட முயல வேண்டும்.. பொறுப்பு என்பது மாநகராட்சிக்கு மட்டும் அல்ல, துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல, தூய்மைத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல.. நமக்கும் உள்ளது என்பதை எப்போதுமே மறக்கக் கூடாது மக்களே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}