டிஸ்டர்ப் செய்யும் நாய்கள்.. சென்னை F4 கார்ப் பந்தயம் நடைபெறும் பகுதிகளில் தீவிர நாய் வேட்டை!

Sep 01, 2024,11:13 AM IST

சென்னை: சென்னையில் கார்ப்பந்தயம் நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் உள்ள இடங்களில் தெருவில் திரியும் நாய்களைப் பிடிக்கும் வேலையில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.


சென்னையில் முதல் முறையாக பார்முலா 4 ஸ்ட்ரீட் கார்ப் பந்தயம் நடைபெறுகிறது. நேற்று இரவு இந்தக் கார்ப் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை சாலைகளில் பைக்குகள், ஆட்டோக்கள்தான் சீறிப் பாய்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் நேற்று இரவு  பந்தயக் கார்கள் சீறிப் பாய்ந்ததை மக்கள் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்தனர்.




கார்ப் பந்தயம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென சில நாய்கள் சாலையில் குறுக்கும் மறுக்குமாக ஓடியதால் சலசலப்பு ஏற்பட்டது. அவற்றை ஊழியர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் இன்றும் பந்தயம் நடைபெறுகிறது, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து இன்று பந்தயத்திற்கு நாய்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக நாய்களைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


பந்தயம் நடைபெறும் பகுதியையொட்டியுள்ள சாலைகளில், தெருக்களில் திரியும் நாய்களை வாகனங்களில் சென்று ஊழியர்கள் பிடித்துச் செல்கிறார்கள். 


ஏற்கனவே சென்னையில் தெரு நாய்கள் அதிக அளவில் இருப்பதால் அவ்வப்போது நாய்கள் மக்களை கடிப்பதும், அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் பிடிப்பதுமாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது கார்ப் பந்தயத்திற்கும் நாய்களால் தொல்லை வருவதால் மீண்டும் நாய் பிடிக்கும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்