- மஞ்சுளா தேவி
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்த நிலையில் காலையிலும் கூட மழை தொடர்ந்து கொண்டுள்ளது. இன்றும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கேளம்பாக்கம், திருப்போரூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, பெரும்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், காற்றின் சுழற்சியாலும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை கனமழையை எதிர்பார்க்கலாம்.
இன்று எங்கு மழை பெய்யும்:
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை திண்டுக்கல், திருவாரூர், கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, ராமநாதபுரம் ,ஆகிய 17 மாவட்டங்களுக்களில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், பொன்னேரியில் அதிகபட்சமாக 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
கும்மிடிபூண்டியில் 3 செ.மீ மழையும், சோழவரம் மற்றும் செங்குன்றத்தில் தலா 1 செமீ மழையும் பதிவாகியுள்ளது
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}