சென்னை: சென்னையில் போக்குவரத்து, பால் விநியோகம், குடிநீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து இன்று மாலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அவர் கூறுகையில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது. 0.04 சதவீத அளவுக்கு மட்டுமே மின்விநியோகம் இல்லை. அதுவும் கூட விரைவில் சரியாகி விடும். சென்னையில் பால் சப்ளை சீரடைந்துள்ளது. வழக்கமான அளவில் பால் விநியோகம் மற்றும் விற்பனை நடந்து வருகிறது.

வட சென்னையில் மட்டும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்து விட்டது. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் வடிக்கப்பட்டு விட்டது.
போக்குவரத்து சீரடைந்துள்ளது. நகர் முழுவதும் வழக்கமான அளவில் பஸ்கள் சென்று வருகின்றன. பஸ் போக்குவரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளி கல்லூரிகள் இயங்கும். அங்கு தண்ணீர் தேங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் தேங்கியிருக்கும் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு விடும். பள்ளி கல்லூரிகளை முழுமையாக சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சிவ்தாஸ் மீனா.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}