சென்னை: அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழ்நாட்டு குழந்தை, தமிழ்நாடு அரசின் உதவியால் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார்- தமிழ்செல்வி தம்பதியினர் அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில் வசித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு குடும்ப பிரச்சனைக் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். அந்த குழந்தை பஞ்சாபி தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த குழந்தையின் சித்தி அபிநயா உடனடியாக அமெரிக்கா சென்றுள்ளார். தத்தெடுத்த பஞ்சாபி தம்பதியினர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நடத்துவதற்கு அமெரிக்க தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அபிநயாவிற்கு உதவியுள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அயலக தமிழ் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அயலக தமிழ் நல வாரிய பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று உரிய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பிற்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று கடிதமும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து குழந்தை சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்திருந்த தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 வருடங்களாக சட்ட போராட்டத்திற்கு பின்னர் குழந்தை மீட்கப்பட்டதால், குழந்தையை காப்பாற்ற உதவிய தமிழக அரசிற்கு குழந்தையின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}