சென்னை: அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழ்நாட்டு குழந்தை, தமிழ்நாடு அரசின் உதவியால் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார்- தமிழ்செல்வி தம்பதியினர் அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில் வசித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு குடும்ப பிரச்சனைக் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். அந்த குழந்தை பஞ்சாபி தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த குழந்தையின் சித்தி அபிநயா உடனடியாக அமெரிக்கா சென்றுள்ளார். தத்தெடுத்த பஞ்சாபி தம்பதியினர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நடத்துவதற்கு அமெரிக்க தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அபிநயாவிற்கு உதவியுள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அயலக தமிழ் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அயலக தமிழ் நல வாரிய பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று உரிய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பிற்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று கடிதமும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து குழந்தை சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்திருந்த தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 வருடங்களாக சட்ட போராட்டத்திற்கு பின்னர் குழந்தை மீட்கப்பட்டதால், குழந்தையை காப்பாற்ற உதவிய தமிழக அரசிற்கு குழந்தையின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}