ஹேப்பி நியூஸ்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. ஜனவரியில் திறக்கப்படும்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்

Dec 25, 2023,05:44 PM IST

சென்னை: சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது இரண்டாவது ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான, கிளாம்பக்கம் பேருந்து நிலையம் பொங்கலை ஒட்டி, ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.


சென்னை கோயம்பேட்டில் ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளது. இது திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, கட்சி முடிக்கப்பட்டு,  அதிமுக ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டது. வெளியூர் செல்லும் பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இங்கு மாற்றப்பட்டு இங்கிருந்து வெளியூர்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்து முனையத்துக்கு அருகிலேயே ஆம்னி பேருந்து நிலையமும் செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில்,  சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டதைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தைக் கட்டி அங்கிருந்து இயக்க புதிய பேருந்து முனையம் கட்ட கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.




86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 400 கோடியே மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகிய நிலையில் மழை நீர் வடிகால் வசதிகள் சரியாக மேற்கொள்ளப்படாதது தெரிய வந்து திறப்பு விழா தாமதமானது. அந்தப் பணிகள் தற்போது சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது அனைத்துப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதால் பேருந்து நிலையத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இன்று இப்பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ அன்பரசன்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வை முடித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், பேருந்து நிலையத்தை தொடங்கினோம்.. முடித்தோம்.. என இல்லாமல் தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வரும் மக்களுக்காக அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். 




இவ்வளவு பணி சுமை வந்ததற்கு காரணம் கடந்த ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாதது தான். இதற்கு தேவையான கட்டமைப்புகள் இயற்கை பேரழிவால் ஏற்பட்ட பெருவெள்ளம், கொரோனாவால் ஏற்பட்ட நோய் தொற்று போன்ற சூழ்நிலைகளால் பேருந்து நிலையத்தின் பணிகளை முடிக்க காலதாமதம் ஏற்பட்டது. தற்போது இதனை சவாலாக எடுத்துக்கொண்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


வெகு விரைவில் தமிழ் புத்தாண்டு அன்று பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். முடிந்த அளவு காவல்துறையுடன் ஒருங்கிணைந்து ஆய்வுகளை நடத்தினோம். அனைத்து வகையிலும்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும்படி திட்டமிட்டுள்ளோம்.




கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படும். 840 ஆம்னி  பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்