அரசியலில் குதித்தால்.. இப்படியெல்லாம் கூட பிரச்சினைகள் வருமோ.. விஜய் கட்சி மீது போலீஸில் நூதன புகார்

Aug 23, 2024,05:06 PM IST

சென்னை: விஐபிக்கள் அரசியலுக்கு வந்தால் சரமாரியாக பிரச்சினைகள் வரும் என்பார்கள். ஆனால் நடிகர் விஜய்க்கு, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய உடனேயே பல்வேறு வகையான விமர்சனங்கள், புகார்கள், போலீஸ் நிலையத்தில் வழக்கு என்று கிளம்பி விட்டன சவால்கள். இந்த புகார்களை தகர்த்தெறிந்து சாதனை படைப்பாரா  என விஜய் ஆதவாளர்கள் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், நேற்று தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். சிவப்பு மஞ்சள் நிறத்திலான அந்தக் கொடியில் இரட்டையானைகளும் வாகை மலரும் இடம் பெற்றுள்ளன. இந்த கொடியை வைத்து இப்போது பலரும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.




கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக கட்சி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அப்போது தான் கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியல்வாதியாக களமிறங்கி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இக்கட்சி தொடர்பான பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். அந்த வரிசையில்தான் நேற்று கட்சி கொடி அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பாடலையும் வெளியிட்டார். இந்தப் பாடல் பல்வேறு தரப்பு மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. 


இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி குறித்து விஜய் மீது  சென்னை கொருக்குப்பேட்டை செல்வம் என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.  அதில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சிக் கொடியில் பல்வேறு விதி மீறல்கள் உள்ளன. கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சின்னம் இதில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம், ஈழத் தமிழர்களின் வாகை மலர் ஆகியவற்றையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். விலங்குகளை தேர்தல் சின்னமாக பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


எனவே நடிகர் விஜய் கட்சியின் கொடிக்குத் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் தனது புகாரில் கூறியுள்ளார்.


ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியும் விஜய் கட்சி கொடிக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் யானை. இக்கட்சியின் கொடியில் நீல நிறத்தில் யானைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் விஜயின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளது. அதனால் யானை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மனு கொடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்