அரசியலில் குதித்தால்.. இப்படியெல்லாம் கூட பிரச்சினைகள் வருமோ.. விஜய் கட்சி மீது போலீஸில் நூதன புகார்

Aug 23, 2024,05:06 PM IST

சென்னை: விஐபிக்கள் அரசியலுக்கு வந்தால் சரமாரியாக பிரச்சினைகள் வரும் என்பார்கள். ஆனால் நடிகர் விஜய்க்கு, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய உடனேயே பல்வேறு வகையான விமர்சனங்கள், புகார்கள், போலீஸ் நிலையத்தில் வழக்கு என்று கிளம்பி விட்டன சவால்கள். இந்த புகார்களை தகர்த்தெறிந்து சாதனை படைப்பாரா  என விஜய் ஆதவாளர்கள் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், நேற்று தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். சிவப்பு மஞ்சள் நிறத்திலான அந்தக் கொடியில் இரட்டையானைகளும் வாகை மலரும் இடம் பெற்றுள்ளன. இந்த கொடியை வைத்து இப்போது பலரும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.




கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக கட்சி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அப்போது தான் கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியல்வாதியாக களமிறங்கி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இக்கட்சி தொடர்பான பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். அந்த வரிசையில்தான் நேற்று கட்சி கொடி அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பாடலையும் வெளியிட்டார். இந்தப் பாடல் பல்வேறு தரப்பு மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. 


இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி குறித்து விஜய் மீது  சென்னை கொருக்குப்பேட்டை செல்வம் என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.  அதில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சிக் கொடியில் பல்வேறு விதி மீறல்கள் உள்ளன. கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சின்னம் இதில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம், ஈழத் தமிழர்களின் வாகை மலர் ஆகியவற்றையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். விலங்குகளை தேர்தல் சின்னமாக பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


எனவே நடிகர் விஜய் கட்சியின் கொடிக்குத் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் தனது புகாரில் கூறியுள்ளார்.


ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியும் விஜய் கட்சி கொடிக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் யானை. இக்கட்சியின் கொடியில் நீல நிறத்தில் யானைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் விஜயின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளது. அதனால் யானை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மனு கொடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்